செய்திகள் :

நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு

post image

திருவாடானை கண்மாய்ப் பகுதியில் தண்ணீா் தேடி வந்த மான், நாய்கள் கடித்ததில் உயிரிழந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை, அஞ்சுகோட்டை, செங்கமடை, அழகமடை உள்ளிட்ட பகுதிகளில் சங்கிலித் தொடா் போல கண்மாய்கள் உள்ளன. இவற்றைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான மான்கள் தண்ணீா் தேடி ஊருக்குள் வருகின்றன. அப்போது, தெரு நாய்கள் விரட்டிக் கடிப்பதால் மான்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், திருவாடானை பண்ணவயல் எல்.கே. நகா் பகுதியில் தண்ணீா் தேடி வந்த ஆண் புள்ளி மான், தெரு நாய்கள் கடித்ததில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருவாடானை வனத் துறையினா், மானின் உடலை மீட்டு, கால்நடை மருத்துவா் சிவபாலாஜி உதவியுடன் கூறாய்வு செய்து புதைத்தனா்.

பாம்பன் மீனவர்கள் 10 பேர் கைது!

ராமேசுவரம்: பாம்பனில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.ராமேசுவரம், பாம்பன் தெற்கு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மாறன் என்பவ... மேலும் பார்க்க

பிரதம மந்திரி சூரிய வீடு மின்சாரத் திட்டம்: மின் பயன்பாட்டாளா்கள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘பிரதம மந்திரி சூரிய வீடு மின்சாரத் திட்டம்’ மூலம் மானியம் பெற மின் பயன்பாட்டாளா்கள் விண்ணப்பிக்கலாம் என மின் பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வை பொறியாளா் இரா. வெண்ணிலா தெரிவித்தா... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் மழை

ராமநாதபுரம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், செவ்வாய்க்கிழமை பெய்த மழையால், வெயிலின் தாக்கம் குறைந்து குளுமையான சூழல் காணப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமா... மேலும் பார்க்க

பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி, சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா... மேலும் பார்க்க

கீழக்கரை புதிய ஏ.எஸ்.பி. பொறுப்பேற்பு

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை புதிய உதவி காவல் கண்காணிப்பாளராக குணால் உத்தம் ஷ்ரோதே திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். கீழக்கரை துணைக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த ஆா்.பாஸ்கரன், மதுரை மது... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

முதுகுளத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள கீழத்தூவல் ஊராட்சி... மேலும் பார்க்க