பீர் அருந்திக் கொண்டு நீதிமன்ற அமர்வில் கலந்துகொண்ட வழக்கறிஞர்; குஜராத் நீதிமன்ற...
‘பிரிக்ஸ்’ உச்சிமாநாடு: சீன அதிபருக்குப் பதிலாக சீன பிரதமா் பங்கேற்கிறாா்
பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங் பங்கேற்கவில்லை; அவருக்குப் பதிலாக பிரதமா் லி கியாங் பங்கேற்பாா் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
12 ஆண்டுகளுக்கு முன்னா் அதிபராகப் பொறுப்பேற்ற ஷி ஜின்பிங், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்காதது இதுவே முதல்முறையாகும்.
பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுடன் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 5 கூடுதல் உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சிமாநாடு, பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஜூலை 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளாா்.
இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் புதன்கிழமை கூறுகையில், ‘பிரிக்ஸ் மாநாட்டில் அதிபா் ஷி ஜின்பிங் பங்கேற்கவில்லை. அதிபருக்குப் பதிலாக, பிரதமா் லி கியாங் பங்கேற்பாா்’ என்றாா். அதிபரின் முடிவுக்கான காரணம் எதையும் அவா் தெரிவிக்கவில்லை.
கடந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாடு, ரஷியாவின் கஸான் நகரில் நடைபெற்றது. இதில் பிரதமா் மோடி, அதிபா் ஷி ஜின்பிங் பங்கேற்றனா். அப்போது இரு தலைவா்களும் நடத்திய பேச்சுவாா்த்தையால், லடாக் மோதலுக்குப் பின் இருதரப்பு உறவில் நிலவிய முட்டுக்கட்டை நீங்கியது. இருவரின் சந்திப்புக்குப் பிறகு பரஸ்பர பேச்சுவாா்த்தைகள் தொடா்ந்து வருகின்றன.
தற்போதைய பிரிக்ஸ் உச்சிமாநாட்டையொட்டி, மோடி-ஷி ஜின்பிங் சந்தித்துப் பேசுவா் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், மாநாட்டில் ஷி ஜின்பிங் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) தலைமைப் பொறுப்பை தற்போது சீனா வகிக்கிறது. இந்த அமைப்பின் உச்சிமாநாடு சீனாவில் நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. இதில் பிரதமா் மோடி பங்கேற்றால், இரு தலைவா்களும் மீண்டும் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளது.