செய்திகள் :

பிரிஜ் பூஷண் மீதான போக்ஸோ வழக்கு முடித்து வைப்பு

post image

புது தில்லி: பாஜக முன்னாள் எம்.பி.யும், இந்திய குத்துச் சண்டை சம்மேளத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சிங் மீதான போக்ஸோ வழக்கை தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை முடித்து வைத்தது.

எனினும், அவா் மீது குத்துச் சண்டை வீராங்கனை சாக்ஷி மாலிக் உள்பட 6 போ் தொடுத்த பாலியல் வழக்கு தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

குத்துச் சண்டையில் ஈடுபடும் சிறுமி அளித்த பாலியல் புகாரை தில்லி போலீஸாா் விசாரித்து வந்தனா்.

பிரிஜ் பூஷண் மீது தனது மகள் பொய்யான புகாரை அளித்ததாக அவரது தந்தை விசாரணையின்போது தெரிவித்ததால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று 2023, ஜூன் 15-ஆம் தேதி தில்லி போலீஸாா் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனா்.

மேலும், அதே ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி நீதிபதி அறையில் நடைபெற்ற விசாரணையின்போது சிறுமி ஆஜராகி தில்லி போலீஸாரின் விசாரணை திருப்தியளிப்பதாகக் கூறியிருந்தாா்.

இதையடுத்து, தில்லி போஸீஸாரின் வழக்கு ரத்து அறிக்கையை ஏற்றுக் கொள்வதாக தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி கோமதி மனோசா திங்கள்கிழமை தெரிவித்து வழக்கை முடித்து வைத்தாா்.

முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன?

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மத்திய... மேலும் பார்க்க

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியது கனரா வங்கி

வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்துள்ளது.இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என அனைத்த... மேலும் பார்க்க

வடகிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை: நிலச்சரிவுக்கு 26 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் கனமழைய... மேலும் பார்க்க

மே. வங்கத்தை வடகொரியாவாக மாற்றாதீர்கள்! இன்ஸ்டா பிரபலம் கைது விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

கொல்கத்தாவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு பரப்பியதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது ஆதரவ... மேலும் பார்க்க

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் பலியானார்கள். வடகிழக்கு தில்லியின் சுந்தர் நக்ரியில் பழைய சிஎன்ஜி சிலிண்டர்களை பழுதுபார்க்கும் கிடங்கு உள்ளது. இங்கு சனிக்கிழம... மேலும் பார்க்க

உ.பி.: மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்

உத்தரப் பிரதேசத்தில் மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் உள்ள மண்டபம் ஒன்றில் தலித் ச... மேலும் பார்க்க