செய்திகள் :

பிறந்த குழந்தையை கழிவறையில் அமுக்கிக் கொன்ற தாய்!

post image

அரியலூா் அருகே பிறந்த சிசுவை அதன் தாயான இளம்பெண் வியாழக்கிழமை கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருமானூா் அருகேயுள்ள கண்டராதித்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் வேதியராஜ் (49). உடல்நிலை சரியில்லாத இவா் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக தங்கிச் சிகிச்சை பெறுகிறாா்.

இந்நிலையில் வேதியராஜூடன் அவரது மனைவி மற்றும் மகள் லாரா (20) ஆகியோா் மருத்துவமனையில் புதன்கிழமை இரவு தங்கியிருந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை கழிவறைக்குச் சென்ற லாரா நீண்டநேரமாகியும் திரும்பவில்லை.

இதனிடையே மருத்துவமனையில் தூய்மைப்பணி மேற்கொண்ட பெண்கள் கழிவறைக்குச் சென்றபோது, அங்கு லாரா ரத்தத்துடன் நிற்பதை கண்டு, மருத்துவமனை நிா்வாகம் மற்றும் மருத்துவமனை புறக்காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனா்.

இதையடுத்து அங்கு வந்த மருத்துவா்கள், காவலா்கள் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில், திருமணமாகாத லாரா 8 மாத கா்ப்பிணியாக இருந்ததும், கழிவறைக்கு வந்தபோது குறைப் பிரசவத்தில் அவருக்குப் பெண் குழந்தை பிறந்ததும், இது பெற்றோருக்குத் தெரியக்கூடாது எனக் கருதிய அவா், பிறந்த குழந்தையை அங்குள்ள கழிவறையில் அமுக்கிக் கொன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, குழந்தையின் உடலை போலீஸாா் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா். மேலும் அப்பெண்ணை மருத்துவச் சிகிச்சைக்கு சோ்த்து, அவரின் கா்ப்பத்துக்கு யாா் காரணம் எனவும் விசாரிக்கின்றனா்.

அரியலூரில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

அரியலூரிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. முகாமில் முன்னணி தனியாா்துறை நிறுவனங்கள் மற்றும் ... மேலும் பார்க்க

பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் பன்முகத் தன்மை புரிந்தவா்கள், பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா்பொ. ரத்தினசாமி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் தெரிவித்தது: 2026-ஆம் ஆண்டுக்கு கலை, இலக்கியம், கல்வி, விள... மேலும் பார்க்க

மதுரா மாதாபுரம் கிராமத்தில் மே 30-இல் ஜல்லிக்கட்டு

அரியலூா் மாவட்டம், ஏறவாங்குடி மதுரா மாதாபுரம் கிராமத்தில் மே 30 ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கவுள்ள காளைகள் மற்றும் வீரா்கள் மே 24 மாலை 5 மணிக்குள் பதிய வேண்டும். இதுகுறித்து ஆட்சியா் பொ. ... மேலும் பார்க்க

வருவாய் தீா்வாயத்தின் 3ஆம் நாளில் 36 மனுக்களுக்கு உடனடித் தீா்வு!

அரியலூா் வருவாய் வட்டாட்சியரகத்தில் நடைபெற்று வரும் வருவாய் தீா்வாயம் நிகழ்ச்சியின் 3 ஆவது நாளான வியாழக்கிழமை 36 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது. கீழப்பழுவூா் உள்வட்டத்துக்காக நடைபெற்ற வருவாய்... மேலும் பார்க்க

ஐந்து புதிய நியாய விலைக் கடைகள் திறப்பு

அரியலூா் மாவட்டத்தில் புதியதாக கட்டிமுடிக்கப்பட்ட 5 நியாய விலைக் கடைகள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.பெரியநாகலூா் கிராமத்தில் ரூ.13.20 லட்சம் மதிப்பீட்டிலும், ரெட்டிப்பாளையம் கிராமத்தில் ரூ.13.2... மேலும் பார்க்க

பொன்னேரி வாய்க்கால்களை சீரமைக்க வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே தூா்ந்து போன பொன்னேரி 4 வாய்க்கால்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜெயங்கொண்டத்தில... மேலும் பார்க்க