செய்திகள் :

பிறழ் சாட்சியாக மாறிய காதல் தம்பதி; கடத்தல் வழக்கில் யுவராஜ் விடுதலை! - விவரம் என்ன?

post image

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்தவர் பாலாஜி. திருவாரூர் மாவட்டம், கொத்தங்குடியைச் சேர்ந்தவர் ஹேமலதா. இவர்கள் இருவரும் கடந்த 2013-இல் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இருவரின் வீட்டில் இவர்களின் திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், ஈரோட்டைச் சேர்ந்த சரவணன் என்பவரிடம் பாலாஜி அடைக்கலம் தருமாறு உதவி கேட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பெருந்துறை பேருந்து நிலையத்துக்கு வந்த பாலாஜி-ஹேமலதா தம்பதியை சரவணுக்கு பழக்கமான அமுதரசன் மற்றும் தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் ஆகிய மூவரும் உதவி செய்வதுபோல் கடத்திச் சென்று அமுதரசன் தோட்டத்து வீட்டில் அடைத்து வைத்ததாகவும், பின்னர் ஹேமலதாவின் தாய் மஞ்சுளாவுக்கு போன் செய்து ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அங்கிருந்து தப்பிய ஹேமலதா, பாலாஜி தம்பதி தங்களை யுவராஜ், அமுதரசன், சரவணன் ஆகிய மூவர் கடத்தி வைத்து பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

யுவராஜ்

இந்த வழக்கில் யுவராஜ் இரண்டாம் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. சாட்சியங்கள், விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதில், ஹேமலதா, பாலாஜி ஆகிய இருவரும் பிறழ்சாட்சிகளாக மாறியதால், யுவராஜ் உள்ளிட்ட மூவர் மீது சாட்டப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படவில்லை. இதனால், யுவராஜ் உள்ளிட்ட மூவரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிபதி சொர்ணக்குமார் உத்தரவிட்டார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் யுவராஜ் அடைக்கப்பட்டுள்ளதால், கடத்தல் வழக்கு தீர்ப்புக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஈரோட்டுக்கு அழைத்து வரப்பட்டார். தீர்ப்பைத் தொடர்ந்து, மீண்டும் யுவராஜ் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அரியலூர்: பச்சிளங்குழந்தை கழிவறைக்குள் அமுக்கி கொலை; இளம் பெண் கைது; பகீர் பின்னணி என்ன?

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கண்டராதீர்த்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதியராஜ்.இவர் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டு, க... மேலும் பார்க்க

``அம்மா நான் திருடல" - உயிரைப் பறித்த 3 சிப்ஸ் பாக்கெட்; குமுறும் பெற்றோர் - என்ன நடந்தது?

மேற்குவங்க மாநிலம் கிழக்கு மிட்னாபூரின் பன்சுரா பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணேந்து தாஸ். 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவனான இவர் மீது, கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், கோசைன்பர் சந்தையில் இருக்கும் ஒ... மேலும் பார்க்க

குழந்தையை கொன்ற கொடூர மாமன்; ஜாமீன் பெற உதவிய வழக்கறிஞர் குடும்பத்தில் சோகம்.. என்ன நடந்தது?

பரமக்குடி எமனேசுவரம் பகுதியை சேர்ந்தவர் தேசிங்குராஜா. மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றின் வரும் இவரது மனைவியின் பெயர் டெய்சி. இவர்களுக்கு இரண்டரை வயதில் லெமோரியா என்ற குழந்தை உள்ளது.நேற்... மேலும் பார்க்க

`திருமணத்திற்கு மறுப்பு' - காதலி வீட்டு முன் தூக்கிட்ட கேரள இளைஞர்; விஷம் குடித்த பெண்

கேரள மாநிலம் கொல்லம் பாருப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜெயின் மகன் ஜிதின். ஜிதினின் தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததைத் தொடர்ந்து சிகிச்சைக்காக கொல்லத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத... மேலும் பார்க்க

கிராமத்தையே மிரட்டிய போதை கும்பல்; புகாரளித்தும் கண்டுகொள்ளாத போலீஸ் - இளைஞன் கொலையில் பகீர் பின்னணி

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகிலுள்ள மேட்டுவேட்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரின் நண்பர்கள் சிலர் கடந்த 19-ம் தேதி தங்களின் கிராமத்து சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்ப... மேலும் பார்க்க

நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்கு தீ; ரூ.30 லட்சம் மதிப்பில் சரக்குகள் எரிந்து சேதம்.. மானாமதுரை பரபரப்பு!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலுள்ள டாஸ்மாக் கடை நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தீ அணைக்கும் பணிமானாமதுரை வைகை ஆற்றை ஒட்டி பல ஆண்டுகளாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிற... மேலும் பார்க்க