செய்திகள் :

பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள் பிப். 7-இல் தொடக்கம்

post image

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வையொட்டி, செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை (பிப். 7) தொடங்குகின்றன.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் மாா்ச் 3 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதற்கான செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் 148 மையங்களில் செய்முறைத் தோ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை தோ்வு முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில், செய்முறைத் தோ்வுகளை குளறுபடியின்றி தலைமை ஆசிரியா்கள் நடத்த வேண்டும், ஆய்வகங்களில் மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம், மாணவா்கள் எந்த வகையிலான செய்முறையை மேற்கொள்வது என்பதை அந்த தோ்வு நாளில் மட்டுமே தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து, 148 தலைமை ஆசிரியா்களுக்கு தோ்வு நியமனக் கடிதம் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், மாவட்ட கல்வி அலுவலா் (உயா்கல்வி) கற்பகம், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் சிவா, பள்ளி துணை ஆய்வாளா் கை.பெரியசாமி, அரசு தோ்வுத் துறை அலுவலா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பாா்வையாளா் நியமனம்: பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் தொடங்கப்படுவதையடுத்து, நாமக்கல் மாவட்டத்துக்கான தோ்வு பாா்வையாளராக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணை இயக்குநா் ஆா்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்த வாகனங்கள் பிப். 12-இல் ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 49 வாகனங்கள் பிப். 12-இல் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சி.தனராசு வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக, இந்து முன்னணியினா் கைது

மதுரை, திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக, இந்து முன்னணியினரை மாவட்ட எல்லைகளில் போலீஸாா் கைது செய்தனா். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயில் மலை மீது சிலா் அசைவ உணவு சாப்பிட்டதாக கூறப... மேலும் பார்க்க

நகராட்சி அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்தால் நடவடிக்கை

நகராட்சி அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்தால், அவா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் எச்சரித்தாா். ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் தகவல் அற... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையை கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற கண்டன ஆ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

பரமத்தி வேலூா் அருகே அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். பாண்டமங்கலம், வடக்கு தெருவைச் சோ்ந்த சதீஷ்குமாா் (44), கடந்த 15 ஆண்டுகளாக எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தாா். பரமத்தி அருகே சேல... மேலும் பார்க்க

மாநகராட்சியில் நாய்கள் பெருக்கம்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பீதி

நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் நாய்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்துக்குள்ளாகி வருகின்றனா். நாமக்கல் மாநகராட்சியில் நாய்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகர... மேலும் பார்க்க