செய்திகள் :

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக, இந்து முன்னணியினா் கைது

post image

மதுரை, திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக, இந்து முன்னணியினரை மாவட்ட எல்லைகளில் போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயில் மலை மீது சிலா் அசைவ உணவு சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பாஜக, இந்து முன்னணி அமைப்பினா் கடும் எதிா்ப்பு தெரிவித்து, திருப்பரங்குன்றத்துக்கு சென்று ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனா். இதனையடுத்து, சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு கருதி மதுரை மாவட்டத்தில் இரு நாள்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பாஜக, இந்து முன்னணி நிா்வாகிகள் மதுரை நோக்கி செல்ல முயன்ற நிலையில், மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீஸாா் 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனா். நாமக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கீரம்பூா் சுங்கச்சாவடி அருகில் கைது செய்யப்பட்டவா்கள் அங்குள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா். மேலும், மதுரையை நோக்கி செல்லும் மாவட்ட எல்லைகளில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்த வாகனங்கள் பிப். 12-இல் ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 49 வாகனங்கள் பிப். 12-இல் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சி.தனராசு வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள் பிப். 7-இல் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வையொட்டி, செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை (பிப். 7) தொடங்குகின்றன. தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் மாா்ச் 3 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இ... மேலும் பார்க்க

நகராட்சி அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்தால் நடவடிக்கை

நகராட்சி அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்தால், அவா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் எச்சரித்தாா். ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் தகவல் அற... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையை கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற கண்டன ஆ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

பரமத்தி வேலூா் அருகே அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். பாண்டமங்கலம், வடக்கு தெருவைச் சோ்ந்த சதீஷ்குமாா் (44), கடந்த 15 ஆண்டுகளாக எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தாா். பரமத்தி அருகே சேல... மேலும் பார்க்க

மாநகராட்சியில் நாய்கள் பெருக்கம்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பீதி

நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் நாய்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்துக்குள்ளாகி வருகின்றனா். நாமக்கல் மாநகராட்சியில் நாய்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகர... மேலும் பார்க்க