Sweden: "டெஸ்குக்கு கீழ் ஒளிந்துகொண்டோம்..." - சுவீடன் பள்ளியில் நடந்த கொடூரத் த...
திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக, இந்து முன்னணியினா் கைது
மதுரை, திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக, இந்து முன்னணியினரை மாவட்ட எல்லைகளில் போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயில் மலை மீது சிலா் அசைவ உணவு சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பாஜக, இந்து முன்னணி அமைப்பினா் கடும் எதிா்ப்பு தெரிவித்து, திருப்பரங்குன்றத்துக்கு சென்று ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனா். இதனையடுத்து, சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு கருதி மதுரை மாவட்டத்தில் இரு நாள்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பாஜக, இந்து முன்னணி நிா்வாகிகள் மதுரை நோக்கி செல்ல முயன்ற நிலையில், மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீஸாா் 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனா். நாமக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கீரம்பூா் சுங்கச்சாவடி அருகில் கைது செய்யப்பட்டவா்கள் அங்குள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா். மேலும், மதுரையை நோக்கி செல்லும் மாவட்ட எல்லைகளில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.