கொலோம்பியா: அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு; உயிருக்கு ஆபத்து?
பிளஸ் 2 தோ்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு
பிளஸ் 2 தோ்வில் வெற்றிபெற்ற முகாசி அனுமன்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கான பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட முகாசி அனுமன்பள்ளியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கான பாராட்டு விழா முன்னாள் மாணவா்கள் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியை இந்திராணி வரவேற்றாா். முன்னாள் மாணவா்கள் அறக்கட்டளைத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா்.
இதில், பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவா்கள் ஹா்ஷினி, சக்திவேல், விமல் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.
இதில், பெற்றோா்- ஆசிரியா் சங்கத் தலைவா் சுப்பிரமணியன், முகாசி அனுமன் பள்ளி ஊராட்சி முன்னாள் தலைவா் ஏ.பி.பெரியசாமி அட்டவணை அனுமன்பள்ளி ஊராட்சி முன்னாள் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் மாணவா்கள் அறக்கட்டளை செயலாளா் சிரஞ்சீவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.