செய்திகள் :

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய மூன்று அணிகள்; 4-வது இடம் யாருக்கு?

post image

நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதிபெற்றுவிட்ட நிலையில், 4-வது இடத்துக்கு கடுமையான போட்டி நிலவுகிறது.

ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படிக்க: தோனியின் ரசிகர்கள் ’தானா சேர்ந்த கூட்டம்!’ - ஹர்பஜன் சிங் புகழாரம்

200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தொடக்க ஆட்டக்காரர்களான ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவருமே விக்கெட் இழப்பின்றி எடுத்தனர். அதிரடியாக விளையாடிய சாய் சுதர்சன் 61 பந்துகளில் 108 ரன்களும், ஷுப்மன் கில் 53 பந்துகளில் 93 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

பிளே ஆஃபில் மூன்று அணிகள்; 4-வது இடம் யாருக்கு?

நேற்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தியதன் மூலம், குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

தில்லிக்கு எதிரான அபார வெற்றியின் மூலம், குஜராத் டைட்டன்ஸ் மட்டுமின்றி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. பிளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் முன்னேறிவிட்ட நிலையில், 4-வது மற்றும் கடைசி இடத்துக்கான போட்டி நிலவுகிறது.

4-வது இடத்துக்கான போட்டியில் தில்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் உள்ளன. இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் 14 புள்ளிகளும், 12 போட்டிகளில் விளையாடியுள்ள தில்லி கேபிடல்ஸ் 13 புள்ளிகளும், 11 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 10 புள்ளிகளும் பெற்றுள்ளன.

பிளே ஆஃப் சுற்றுக்கு 4-வது மற்றும் கடைசி அணியாக தகுதி பெறுவதற்கான போட்டி இந்த மூன்று அணிகளுக்குள் நிலவுகிறது. பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறப் போகும் நான்காவது அணி யார் என்பது இன்னும் ஒரு சில போட்டிகள் நிறைவடைந்தவுடன் தெரிந்துவிடும்.

இதையும் படிக்க: டிராவிஸ் ஹெட்டுக்கு கரோனா: ஹைதராபாத் அணிக்கு பின்னடைவு!

சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியிலிருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

மிட்செல் மார்ஷ், அய்டன் மார்க்ரம் அதிரடி: ஹைதராபாதுக்கு 206 ரன்கள் இலக்கு!

சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் லக்னௌ ச... மேலும் பார்க்க

லக்னௌ பேட்டிங்; பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்குமா?

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன... மேலும் பார்க்க

டி20 போட்டிகளில் 5,000 ரன்களைக் கடந்த ஷுப்மன் கில்!

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் டி20 போட்டிகளில் 5,000 ரன்களைக் கடந்துள்ளார்.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிக... மேலும் பார்க்க

டி20 போட்டிகளில் விராட் கோலியின் சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

டி20 போட்டிகளில் விராட் கோலியின் சாதனையை கே.எல்.ராகுல் முறியடித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட... மேலும் பார்க்க

லுங்கி என்கிடிக்கு மாற்றாக ஜிம்பாப்வே வீரரை களமிறக்கும் பெங்களூரு அணி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளார் லுங்கி என்கிடிக்கு பதிலாக ஜிம்பாப்வே வீரர் பிலெஸ்ஸிங் முசரபனி மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளை... மேலும் பார்க்க

டிராவிஸ் ஹெட்டுக்கு கரோனா: ஹைதராபாத் அணிக்கு பின்னடைவு!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் இந்தியாவுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர்ப் பத... மேலும் பார்க்க