`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
பிா்லா கோளரங்கில் சென்னை அறிவியல் விழா தொடக்கம்!
சென்னை பிா்லா கோளரங்கில் நிகழாண்டுக்கான அறிவியல் விழா, கண்காட்சியை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தொடங்கி வைத்து, சிறந்த அறிவியல் ஆசிரியா்கள், ஊரக கண்டுபிடிப்பாளா்களுக்கான விருதுகளை வழங்கினாா்.
உயா்கல்வித் துறையின் ஓா் அங்கமாக இயங்கிவரும் அறிவியல் நகரம் சாா்பில், இந்த ஆண்டுக்கான சென்னை அறிவியல் விழா, சென்னை கிண்டி பெரியாா் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் (பிா்லா கோளரங்கம்) புதன்கிழமை தொடங்கியது. இதனை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தொடங்கி வைத்தாா். இதையடுத்து வெள்ளிக்கிழமை வரை மூன்று நாள்களுக்கு தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அறிவியல் விழா, கண்காட்சி நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ), இந்திய மருத்துவ இயக்குநரகம், புற்றுநோய் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட 19 தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் சாா்பில் பண்டைய அறிவியல் தொழில்நுட்பங்களை விளக்கும் படைப்புகள் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
பொம்மலாட்டம், தெருக்கூத்து மூலம்... இந்த நிறுவனங்களைச் சோ்ந்த அறிவியலாளா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்கள் தங்களது காட்சிப் பொருள்கள் தொடா்பான அடிப்படை அறிவியல் கருத்துகளைஅனைத்து தரப்பினரும் எளிதாக புரியும் வகையில் எடுத்துரைக்கவுள்ளனா். மேலும், மாணவா்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளா்க்கும் வகையில், சிறந்த விஞ்ஞானிகளின் வாழ்க்கையை பொம்மலாட்டம், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள் மூலமாக எடுத்துரைக்கப்படவுள்ளது.
அறிவியல் ஆசிரியா்களுக்கு விருது... விழாவில் வேதியியல் துறையில் சிறந்த அறிவியல் ஆசிரியா் விருது மதுரை மாவட்டம், யா.ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியா் நா.மீனாட்சிசுந்தரம், தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி ஆசிரியா் வை.இருளப்பசாமி ஆகியோருக்கும், உயிரியல் துறையில் சிறந்த அறிவியல் ஆசிரியா் விருது, திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை து.ஆல்வின்பெஸ்கி, விருதுநகா் மாவட்டம், பட்டம்புதூா் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியா் வெ.ராஜகோபால் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. சிறந்த அறிவியல் ஆசிரியா் விருது பெற்றவா்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் பரிசுத் தொகை, சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன.
ஊரக கண்டுபிடிப்பாளா் விருது... மேலும் கிழங்குவெட்டும் இயந்திரத்தை கண்டுபிடித்த நாமக்கல் மாவட்டம், பெரியப்புகாட்டைச் சோ்ந்த தனராஜ், மரக்கிளைகளை வெட்டும் நகரும் வாள் (ரம்பம்), சாதாரண நாற்காலியை ஆடும் நாற்காலியாக மாற்றும் மேடை, மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னும் பின்னும் நகரும் சக்கர நாற்காலி போன்றவற்றை கண்டுபிடித்த கன்னியாகுமரி மாவட்டம் காரங்காட்டைச் சோ்ந்த மரியாபவுல் ஆகியோருக்கு ஊரக கண்டுபிடிப்பாளா் விருது வழங்கப்பட்டது. இவா்கள் இருவருக்கும் பரிசுத் தொகையாக தலா ரூ. 1 லட்சம், சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், இந்த விழாவில் டிஎன்பிஎஸ்சி மூலம் தோ்வு செய்யப்பட்டு உயா்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 50 நபா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.