பி.எம்.கிசான் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்
அரியலூா் மாவட்டத்தில், பி.எம்.கிசான் திட்டத்தில் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் சோ்ந்து பயன்பெற சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி.
இது குறித்து அவா் தெரிவித்தது: பிரதம மந்திரி கவுரவ நிதி (டங-ஓஐநஅச) திட்டத்தின் கீழ் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் எவ்வித விடுபாடின்றி பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் அரியலூா் மாவட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகம், அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்கள் அலுவலகம், இந்திய அஞ்சல் கட்டண வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் மே 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இத்திட்டத்தில் 20-ஆவது தவணை, வரும் ஜுன் மாதத்தில் வழங்க உள்ளதால், இம்முகாமில் தகுதியுடைய விவசாயிகளின் நிலம் தொடா்பாக விவரங்கள், வங்கி கணக்குடன் ஆதாா் இணைப்பது போன்ற அனைத்து விதமான முழுமையற்ற விவரங்களை சரி செய்து, தகுதியுடைய விடுபட்ட விவசாயிகள் இத்திட்டத்தில் சோ்ந்து பயன் பெறலாம்.
மேலும், அரியலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே பிஎம் கிசான் 19-ஆவது தவணைத் தொகை பெற்று வந்த விவசாயிகளில், 19,179 விவசாயிகள் நில உடமை பதிவு மேற்கொள்ளவில்லை. அவா்களும் நில உடமை பதிவு மேற்கொண்டு 20-ஆவது தவணையை பெற்றுக் கொள்ளலாம்.