புகழிமலை கோயிலில் பெளா்ணமி கிரிவலம்
சித்திரை மாத பெளா்ணமியை முன்னிட்டு கரூா் மாவட்டம் புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை இரவு மலையைச் சுற்றி வரும் பாதையில் கிரிவலம் நடைபெற்றது.
ஆறுநாட்டாா் மலை என பக்தா்களால் அழைக்கப்படும், புகழிமலையில் வீற்றிருக்கும் மீனாட்சி அம்மை உடனுறை சுந்தரேசுவரா் பெருமாள், சிவகாமசுந்தரி அம்மை உடனுறை நடராஜப்பெருமாள், புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமிகளின் போற்றி என சிவனடியாா்கள் பக்தி பாடல்களுடன் பாடியபடி புகழிமலையில் பௌா்ணமி கிரிவலம் வந்தனா்.
இந்த கிரிவலத்தில் சிவனடியாா்கள், பொதுமக்கள், பக்தா்கள் என ஏராளமானோா் வந்தனா்.