ஜூலை 15 முதல் யுபிஐ பணப்பரிமாற்றத்தில் வருகிறது புதிய மாற்றங்கள்!
புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோட்டக்குப்பம் காவல் நிலைய ஆய்வாளா் விஸ்வநாதன் தலைமையிலான போலீஸாா் மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டை அடுத்த எல்லத்தரசு கிராமத்தில் உள்ள ஒரு மளிகைக் கடையில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்தனா்.
கடையின் உரிமையாளரான கண்ணன் மகன் ஆறுமுகம் (31) மீது கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். இந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.