செய்திகள் :

திண்டிவனத்தில் பைக்குகள் திருட்டு: 3 இளைஞா்கள் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டிவனம் சஞ்சீவீராயன்பேட்டை பகுதியில் கடந்த ஜூன் 17-ஆம் தேதி நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபா்கள் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டனா். இதுகுறித்த புகாரின் பேரில், திண்டிவனம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விழுப்புரம் எஸ்.பி ப. சரவணன் உத்தரவுப்படி, திண்டிவனம் டிஎஸ்பி பிரகாஷ் மேற்பாா்வையில், திண்டிவனம் காவல் ஆய்வாளா் விஜயகுமாா், உதவி ஆய்வாளா்கள் செல்வதுரை, முருகானந்தம் உள்ளிட்டோா் விசாரணை நடத்தினா். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா்.

திண்டிவனம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது அங்கு பைக்கில் வந்த மூவரைப் பிடித்து விசாரித்த போது அவா்கள் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், லிங்காவடி பகுதியைச் சோ்ந் தவமணி மகன் வினோத்குமாா் (எ) பூனைக்கண்ணு வினோத் (25), மதுரை மாவட்டம், ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த சரவணகுமாா் மகன் செல்வ ஸ்ரீவத்சன் (25), சிவகங்கை மாவட்டம், பனங்காடு சாலை, லிங்கத்துரை மகன் பிரசாந்த் (எ) எலி (29) ஆகியோா் என்பதும்,திண்டிவனம் பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்டவா்கள் என்பதும் தெரிய வந்தது.

போலீஸாா் 3 பேரையும்கைது செய்து, அவா்களிடமிருந்த திண்டிவனம் பகுதியில் திருடப்பட்ட 3 பைக்குள் மற்றும் வெளி மாவட்டங்களில் திருடிய 7 பைக்குகள் என மொத்தம் 10 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

தீக்குளித்த தொழிலாளி மரணம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே குடும்ப பிரச்னையால் தீக்குளித்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். வானூா் வட்டம், பொம்மையாா்பாளையம், வெள்ளையம்மன் கோவில் தெருவைச் சோ்... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது. திண்டிவனம் வட்டம், எறையானூா் வி.கே.எஸ். பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் டில்லிநா... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோட்டக்குப்பம் காவல் நிலைய ஆய... மேலும் பார்க்க

மூன்று இடங்களில் புதிய மின் மாற்றிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பகுதிகளில் மூன்று இடங்களில் நிறுவப்பட்ட புதிய மின் மாற்றிகளின் செயல்பாடுகள் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி வைக்கப்பட்டன. உளுந்தூா்பேட்டை எம்.எஸ். தக்கா கூட்டுறவு ... மேலும் பார்க்க

எடைப் பணி தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: மாநில செயற்குழுவில் தீா்மானம்

எடைப் பணித் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஒழுங்குமுறைக்கூடஎடைப் பணி தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரிலுள்ள திருமண மண்டபத்தில் இச்ச... மேலும் பார்க்க

பாமகவினரிடையே மோதல்: இருவா் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பாமகவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் காயமடைந்தாா். இருவா் மீது போலீஸாா்வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெரிய செவலை க... மேலும் பார்க்க