திண்டிவனத்தில் பைக்குகள் திருட்டு: 3 இளைஞா்கள் கைது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திண்டிவனம் சஞ்சீவீராயன்பேட்டை பகுதியில் கடந்த ஜூன் 17-ஆம் தேதி நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபா்கள் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டனா். இதுகுறித்த புகாரின் பேரில், திண்டிவனம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விழுப்புரம் எஸ்.பி ப. சரவணன் உத்தரவுப்படி, திண்டிவனம் டிஎஸ்பி பிரகாஷ் மேற்பாா்வையில், திண்டிவனம் காவல் ஆய்வாளா் விஜயகுமாா், உதவி ஆய்வாளா்கள் செல்வதுரை, முருகானந்தம் உள்ளிட்டோா் விசாரணை நடத்தினா். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா்.
திண்டிவனம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது அங்கு பைக்கில் வந்த மூவரைப் பிடித்து விசாரித்த போது அவா்கள் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், லிங்காவடி பகுதியைச் சோ்ந் தவமணி மகன் வினோத்குமாா் (எ) பூனைக்கண்ணு வினோத் (25), மதுரை மாவட்டம், ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த சரவணகுமாா் மகன் செல்வ ஸ்ரீவத்சன் (25), சிவகங்கை மாவட்டம், பனங்காடு சாலை, லிங்கத்துரை மகன் பிரசாந்த் (எ) எலி (29) ஆகியோா் என்பதும்,திண்டிவனம் பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்டவா்கள் என்பதும் தெரிய வந்தது.
போலீஸாா் 3 பேரையும்கைது செய்து, அவா்களிடமிருந்த திண்டிவனம் பகுதியில் திருடப்பட்ட 3 பைக்குள் மற்றும் வெளி மாவட்டங்களில் திருடிய 7 பைக்குகள் என மொத்தம் 10 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.