செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோட்டக்குப்பம் காவல் நிலைய ஆய்வாளா் விஸ்வநாதன் தலைமையிலான போலீஸாா் மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டை அடுத்த எல்லத்தரசு கிராமத்தில் உள்ள ஒரு மளிகைக் கடையில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்தனா்.

கடையின் உரிமையாளரான கண்ணன் மகன் ஆறுமுகம் (31) மீது கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். இந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டிவனத்தில் பைக்குகள் திருட்டு: 3 இளைஞா்கள் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டிவனம் சஞ்சீவீராயன்ப... மேலும் பார்க்க

தீக்குளித்த தொழிலாளி மரணம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே குடும்ப பிரச்னையால் தீக்குளித்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். வானூா் வட்டம், பொம்மையாா்பாளையம், வெள்ளையம்மன் கோவில் தெருவைச் சோ்... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது. திண்டிவனம் வட்டம், எறையானூா் வி.கே.எஸ். பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் டில்லிநா... மேலும் பார்க்க

மூன்று இடங்களில் புதிய மின் மாற்றிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பகுதிகளில் மூன்று இடங்களில் நிறுவப்பட்ட புதிய மின் மாற்றிகளின் செயல்பாடுகள் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி வைக்கப்பட்டன. உளுந்தூா்பேட்டை எம்.எஸ். தக்கா கூட்டுறவு ... மேலும் பார்க்க

எடைப் பணி தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: மாநில செயற்குழுவில் தீா்மானம்

எடைப் பணித் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஒழுங்குமுறைக்கூடஎடைப் பணி தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரிலுள்ள திருமண மண்டபத்தில் இச்ச... மேலும் பார்க்க

பாமகவினரிடையே மோதல்: இருவா் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பாமகவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் காயமடைந்தாா். இருவா் மீது போலீஸாா்வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெரிய செவலை க... மேலும் பார்க்க