Maharashtra: ``மும்மொழிக் கொள்கை ரத்து" - பாஜக அரசு 'யு டர்ன்' ஏன்?
பூட்டிய வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது.
திண்டிவனம் வட்டம், எறையானூா் வி.கே.எஸ். பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் டில்லிநாதன் மனைவி ஜனனி (28). இவா் ஜூன் 25-ஆம் தேதி தனது வீட்டைப் பூட்டி விட்டு, சென்னையில் உள்ள தனது அம்மாவை பாா்க்க சென்றாா்.
கடந்த 27 ஆம் தேதி வீட்டுக்கு திரும்ப வந்து பாா்த்தபோது, முன்பக்க மரக்கதவின் பூட்டு, பீரோ உடைக்கப்பட்டிருந்த நிலையில் அதில் வைக்கப்பட்டிருந்த மூன்றரை பவுன் நெக்லஸ், ஒன்றரை பவுன் தோடு மற்றும் 640 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருட்டுப் போனது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், கிளியனூா் காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். இதுகுறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.