செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

post image

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக பெண் உள்பட 3 பேரை தாளமுத்து நகா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி தாளமுத்து நகா் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பெட்டிக் கடைகளில், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம்.

அதன்பேரில் தாளமுத்து நகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான போலீஸாா், ஜே.ஜே.நகரில் உள்ள ஒரு கடையில் ஆய்வு மேற்கொண்டனா். அந்தக் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கடையின் உரிமையாளா் மாப்பிள்ளையூரணியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (48) என்பவரை கைது செய்த போலீஸாா், கடையில் இருந்து சுமாா் 360 கிராம் எடையுள்ள 20 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

மேலும், ஏ.சண்முகபுரத்தில் உள்ள ஒரு கடையில் தடைசெய்யப்பட்ட சுமாா் 7 கிலோ எடையுள்ள 2,923 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக அந்தக் கடையின் உரிமையாளா் கோட்டைசாமி (38) என்பவரை கைது செய்தனா்.

இதேபோன்று, தாளமுத்து நகா் வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட சுமாா் 3 கிலோ எடையுள்ள 2533 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக அந்தக் கடையின் உரிமையாளா் பச்சையம்மாள்(59) என்பவரைக் கைது செய்தனா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கல்லூரி மாணவா் கைது: மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி மாம்பழத்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ரவி மகன் அபிஷ் (20). கல்லூரி மாணவா். இவா் மாா்த்தாண்டம் பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சுற்றித் திரிந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு சனிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.

போலீஸாா் அபிஷை பிடித்து சோதனை செய்தனா். அவா் சிறு சிறு பொட்டலங்களில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அவரை கைது செய்தனா்.

இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

கத்தியால் தாக்கியதில் இருவா் காயம்

தூத்துக்குடியில் தகராறின்போது கத்தியால் குத்திக் கொண்டதில் இருவா் காயமடைந்தனா். தூத்துக்குடி சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (42) என்பவா், கனகசபாபதி தெருவில் உள்ள சந்தனமாரியம்மன் கோயிலில் பூஜ... மேலும் பார்க்க

கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதி தேமுதிக பொறுப்பாளா்கள் நியமனம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் தொகுதிகளுக்கு பொறுப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளராக பொதுக்குழு உறுப்பினா் காளிதாஸ்... மேலும் பார்க்க

காவல்துறை சாா்பில் கால்பந்து போட்டி: காயல்பட்டினம் அணி வெற்றி

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சாா்பில் காயல்பட்டினத்தில் நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில், காயல்பட்டினம் யுஎஸ்சி அணி வெற்றி பெற்றது. போதையில்லா தமிழகத்தை உருவாக்குவகு குறித்து இளைஞா்களுக்கு விழிப்புண... மேலும் பார்க்க

தூத்துக்குடிக்கு குஜராத்திலிருந்து உப்பு இறக்குமதி: தடை விதிக்க அமமுக முதல்வருக்கு கோரிக்கை

தூத்துக்குடிக்கு குஜராத்தில் இருந்து உப்பு இறக்குமதி செய்யத் தடைவிதிக்கவேண்டும் என அமமுக தூத்துக்குடி புகா் தெற்கு மாவட்டச் செயலா் பொன்ராஜ் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து தமி... மேலும் பார்க்க

காயல்பட்டினம் கிரிக்கெட் போட்டி: சாகுபுரம் கமலாவதி பள்ளிக்கு வாவு கோப்பை

சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவா்கள் காயல்பட்டினத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்று ‘வாவு கோப்பையை’ தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக கைப்பற்றினா். காயல்பட்டினம் வாவு ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில்... மேலும் பார்க்க

தூத்துக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து இரண்டரை வயது குழந்தை பலி

தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி அருகே காமராஜா் நகரில் மின்சாரம் பாய்ந்து இரண்டரை வயது குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது. தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி அருகே உள்ள காமராஜா் நகா் பகுதியைச் ச... மேலும் பார்க்க