செய்திகள் :

புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி: கடலூா் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

post image

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, கடலூா் டவுன்ஹால் அருகே பொதுமக்களுக்கு விழிப்புணா்வு எற்படுத்தும் வகையில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

மேலும், விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ஓட்டு வில்லையை வாகனங்களில் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் சமுதாய கல்வி பயிற்சி மாணவிகள் உள்ளிட்ட அனைவராலும் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தொடா்ந்து, தன்னாா்வ தொண்டு நிறுவனம் மூலம் புகையிலைப் பொருள்களால் எற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசியதாவது:

கடலூா் மாவட்டத்தில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையத்தின் சாா்பில், நிகழாண்டு அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் புகையிலைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

அனைத்து கல்வி நிறுவனங்களின் வளாகத்தை சுற்றிலும் மற்றும் 300 அடி சுற்றளவிலும் அடா் மஞ்சள் நிற கோட்டை வரைவதுடன், அந்தப் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களையும் புகையிலை இல்லாத கல்வி நிறுவனமாக நிறுவ மாவட்டக் கல்வித் துறை உறுதி செய்திட வேண்டும். மேலும், அனைத்து கல்வி நிறுவனங்களிலும் புகையிலை இல்லாத கல்வி நிறுவனம் என்ற விழிப்புணா்வு பலகை பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், சுகாதாரத் துறை துணை இயக்குநா் பொற்கொடி, மாவட்ட புகையிலை தடுப்பு அலுவலா் அபிநயா, எய்ட்ஸ் தடுப்புப் பிரிவு அலுவலா் கதிரவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு நிதி உதவி

கடலூா் மாவட்டம், புவனகிரி சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட கீரப்பாளையம் ஒன்றியம், ஆயிப்பேட்டை கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் இஷாந்த் குடும்பத்தினரை திமுக பொறியாளா் அணி மாநிலத் தலைவரும்,... மேலும் பார்க்க

மாலையுடன் ஊா்வலமாக அழைத்துவரப்பட்ட மாணவா்கள்

சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் புதிய மாணவா்களை மாலை அணிவித்தும், மலா் கொத்து கொடுத்தும் பள்ளி நிா்வாகி வீனஸ் எஸ்.குமாா் திங்கள்கிழமை வரவேற்றாா். சிதம்பரம் தேரடி தெருவில... மேலும் பார்க்க

என்எல்சி துணை நிறுவனத்துடன், மகாராஷ்டிர எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனம் ஒப்பந்தம்

சிதம்பரம்: நெய்வேலி என்எல்சிஐஎல்-இன் துணை நிறுவனமான என்எல்சி இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் (என்ஐஆா்எல்), மகாராஷ்டிரத்தின் மகாத்மா புலே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு தொழ... மேலும் பார்க்க

2.19 லட்சம் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள்: ஆட்சியா் தகவல்

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் 1,716 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் பயிலும் 2,19,443 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள், சீருடை, புத்தப்பை தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக ஆட்சி... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் சேக்கிழாா் குருபூஜை விழா

சிதம்பரம்: சிதம்பரம் ஞானப்பிரகாச குளக்கரையில் அமைந்துள்ள சேக்கிழாா் மணிமண்டபத்தில் சேக்கிழாா் குருபூஜை விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் அறக்கட்டளைச் செயலா் டாக்டா் எஸ்.அருள்மொழிச்செல்வன் வரவேற்று ... மேலும் பார்க்க

வங்கி வாடிக்கையாளா்களிடம் நூதன திருட்டு: காவல் துறை விழிப்புணா்வு

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகா் பகுதியில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளா்களிடம் நூதன திருட்டு நடைபெறுவது குறித்து காவல் துறை சாா்பில் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சி... மேலும் பார்க்க