செய்திகள் :

``புதிதாக கட்சி ஆரம்பித்து, அடுத்த முதலமைச்சர் என்று சொன்னால்..'' - அமைச்சர் பெரியகருப்பன்

post image

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புதூரில் திமுக மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் இப்தார் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் பேசும்போது, "சிறுபான்மையினருக்கு வழங்கக்கூடிய சலுகைகளை பறிப்பதும், மத கோட்பாடுகளில் உள்ள சட்ட திட்டங்களை அழிக்கின்ற நடவடிக்கையிலும் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டு வருகின்றனர்.

அமைச்சர் பெரியகருப்பன்

சி ஏ.ஏ உள்ளிட்ட சட்டங்களை போராடி தடுத்து நிறுத்திய இயக்கம்தான் திமுக. ஆனால், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜகவின் தீர்மானத்தை ஆதரித்தனர்.

இன்று அதிமுகவினர் கபட வேடமிட்டு நாங்கள்தான் சிறுபான்மையினரை காக்கக்கூடிய சக்தி என்பது போல பேசுவதுதான் நகைப்புக்குரியது.

அமைச்சர் பெரியகருப்பன்

திமுக தொடங்கப்பட்டபோது அரசியலில் ஈடுபடக்கூடிய இயக்கமாக தொடங்கப்படவில்லை. தமிழர்கள் தன்மான உணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டும், தமிழர்கள் யாருக்கும் அடிமைபட்டவர்கள் இல்லை என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக சமுதாய சீர்திருத்த இயக்கமாக தொடங்கப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு பின்னர்தான் தேர்தல் களத்தில் போட்டியிட்டது. ஆனால், இன்று, புதிதாக ஆரம்பிக்கப்படும் இயக்கங்கள் கட்சியின் பெயர், கொடியை அறிவிப்பதற்கு முன்பாக, பிறந்த குழந்தை பட்டப்படிப்பு முடித்தது போல தாங்கள்தான் அடுத்த முதலமைச்சர் என பேசுகின்றனர். இவற்றையெல்லாம் மக்கள் அனைவருமம் கேலிப் பொருளாகத்தான் பார்க்கின்றனர்" என்றார்.

"நேரடியாக பேச முடியாமல் எங்கள் தலைவர் விஜய்யை மனதில் வைத்து அமைச்சர் பேசியதன் மூலம் அவர் ஆளுங்கட்சிக்கு தொடர்ந்து எரிச்சலை உண்டாக்குகிறார் என்பது தெரிகிறது" என்கின்றனர் த.வெ.க-வினர்

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Doctor Vikatan: 18 வயது பெண்ணுக்கு நரைமுடி வருவதை தடுக்க முடியுமா? இளநரை பிரச்னைக்கு தீர்வு என்ன?

Doctor Vikatan: என்மகளுக்கு18 வயதுதான் ஆகிறது. அதற்குள் அவளுக்கு தலையில் நிறைய வெள்ளைமுடிகள் இருக்கின்றன. இப்படியே தொடர்ந்தால் இன்னும் சில வருடங்களில் மொத்த தலையும் நரைத்துவிடுமோ என பயமாக உள்ளது. இதைத... மேலும் பார்க்க

``ஆண்களுக்கான கேன்சர் பரிசோதனை; இனி வீட்டிலேயே செய்யலாம்'' - ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன?

கேன்சரில் பல வகைகள் இருக்கின்றன. அந்த வகையில், ஆண்களுக்கு அதிகமாக வரக்கூடிய கேன்சர்களில் இரண்டாவது இடம் புராஸ்ட்டேட் கேன்சருக்குத்தான். எந்த உடல் பாகத்தில் கேன்சர் வருகிறதோ, அதன் பெயராலேயே கேன்சரை குற... மேலும் பார்க்க

US: ``வெனிசுலா உடன் வணிகம் செய்தால் 25% வரி!'' - ட்ரம்பின் புது அதிரடி; இந்தியாவை பாதிக்குமா?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'எந்த நாடுகள் வெனிசுலா நாட்டிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குகிறதோ, அந்த நாடுகளின் மீது 25 சதவிகித வரி விதிக்கப்படும்' என்று நேற்று எச்சரித்துள்ளார். இதுக்குறித்து தனது... மேலும் பார்க்க

``தமிழ் பண்பாட்டை ஆளுநர் ரவி அழகாக பாதுகாக்கிறார்'' - பார்த்திபன் பேசியது என்ன?

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் உலக காசநோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார். நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் வீட்டில் கொட்டப்பட்ட கழிவுநீர், தாக்குதல்.. - திருமா, இ.பி.எஸ் கண்டனம்

நேற்று யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டின் பின்பக்க கதவு வழியாக சிலர் புகுந்து, வீட்டிற்குள் கழிவு நீர் போன்றவற்றை கொட்டியுள்ளனர். மேலும், அவரது வீட்டில் இருந்த பொருள்களை அடித்து உடைத்துள்ளனர். சவுக்கு ... மேலும் பார்க்க

மந்தி பிரியாணி சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி, மயக்கம் நாகர்கோவில் ஹோட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் லியாகத் என்ற பெயரில் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் மணவாளக்குறிச்சி அருகே உள்ள பெரியவிளை மீனவ கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவர் கடந்த சனிக்கிழமை மதியம்... மேலும் பார்க்க