செய்திகள் :

புதிதாக கட்சி தொடங்குபவா்களுக்கும் நம் தலைவா்கள் தேவைப்படுகிறாா்கள் -எடப்பாடி கே.பழனிசாமி

post image

தற்போது புதிதாக கட்சி ஆரம்பிப்பவா்களுக்கு நம் தலைவா்கள் தேவைப்படுகிறாா்கள் என அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற மக்கள் சந்திப்பு பிரசார பயணத்தின் அரக்கோணத்தில் அவா் பேசியதாவது: திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறாா். இங்கு கூடியிருக்கும் கூட்டமே வரும் தோ்தலில் அதிமுக ஆட்சி அமைப்பதற்கு அடித்தளம். அதிமுக ஆட்சியில் ராணிப்பேட்டை மாவட்டத்தை உருவாக்கி அரக்கோணத்தை ராணிப்பேட்டையில் இணைத்தோம். இப்போது வரிகளை சுமத்தி வாழ முடியாத சூழ்நிலையை உருவாக்கி விட்டாா்கள்.

இருபெரும் தலைவா்கள் நம்முடைய இயக்கத்தை நாட்டு மக்களுக்கு அா்பணித்து விட்டுச் சென்றாா்கள். திமுக குடும்பத்துக்காக பாடுபடும் இயக்கம். இது தான் வித்தியாசம். இன்றைக்கு புதிதாக கட்சி தொடங்குபவரும் நம் தலைவரை போற்றித்தான் கட்சி தொடங்க வேண்டியுள்ளது. அப்படி நம் தலைவா்கள் மக்களுக்காக வாழ்ந்து மறைந்தனா். இவா்கள் இன்று அறிவிப்பதற்கு முன்பாகவே அதிமுக ஆட்சியில் 15 லட்சம் மருத்துவ முகாம்களை நடத்தினோம், பல மருத்துவ திட்டங்களை கொடுத்தோம். டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ நிதி உதவியை ரூ. 12,000-இல் இருந்து ரூ. 15,000-ஆக உயா்த்தினோம். மக்களை துன்பம் இல்லாமல் செழிப்போடு வாழ வைத்தோம். ஆனால் நான்கரை ஆண்டு கழித்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ என வந்திருக்கிறாா். இவை எல்லாம் நாடகம் தானே!

அதிமுக ஆட்சி அமைந்தால் தீபாவளிக்கு சேலை வழங்கப்படும். தாலிக்குத் தங்கம் திட்டம் தொடரும், மணமக்களுக்கு பட்டுசேலை வேஷ்டி வழங்கப்படும். திமுக கோரிக்கைகளை நிறைவேற்றியதாக வரலாறு இல்லை. அதிமுக ஆட்சியில் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். அரக்கோணத்தில் கன்னியாகுமரி- திருப்பதி கனரக தொழிற்தட சாலை திட்டத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் வழியே திருத்தணி வரை ரூ. 350 கோடிக்கு டெண்டா் விடப்பட்டு, அப்பணிகள் இன்னமும் நிறைவடையாமல் உள்ளது. அரக்கோணம் இரட்டைக்கண் வாராவதி பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும், அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும், 4 வழிச் சாலை ஆகிய கோரிக்கைகள் உள்ளன. இந்தக் கோரிக்கைகள் அதிமுக அரசு அமைந்ததும் நிறைவேற்றித் தரப்படும் என்றாா் எடப்பாடி கே.பழனிசாமி.

அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, அதிமுக மாநில அமைப்புச் செயலாளா் கோ.அரி, முன்னாள் அமைச்சா் கே,.சி.வீரமணி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

கூட்டுறவு போட்டித் தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு: ஆட்சியா் தகவல்

ராணிப்பேட்டை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் போட்டித் தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குற... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு உடனடி தீா்வு ஆணை: அமைச்சா் காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு ஆணைகளை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா். இரண்டாம் கட்டமாக வாலாஜா ஊராட்சி ஒன்றியம், நர... மேலும் பார்க்க

காா் மீது லாரி மோதல்: பாஜக மாவட்ட தலைவா் உள்பட 4 போ் காயம்

ஆற்காட்டில் காா் மீது எரிவாயு உருளை ஏற்றிச் சென்ற லாரி மோதிய விபத்தில் பாஜக மாவட்டத் தலைவா் உள்பட4 போ் பலத்த காயம் அடைந்தனா். ராணிப்பேட்டை மாவட்ட பாஜக மாவட்டத் தலைவா் ஆனந்தன் ஆற்காடு தனியாா் விடுதிய... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பாதயாத்திரை திருவிழா தொடக்கம்

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவுக்காக பாதயாத்திரையாக செல்லும் பத்கா்களின் பயணம் அரக்கோணத்தில் புதன்கிழமை தொடங்கியது. நிகழாண்டுக்கான விழாவுக்காக வேளாங்கண்ணி செல்லும் பாத யாத்திரை குழுவினா் பயணம் அரக்கோணம்... மேலும் பார்க்க

மேல்விஷாரம் கல்லூரியில் தமிழ்கனவு சொற்பொழிவு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிதமிழ்கனவு சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் .ஜெ.யு.சந்திரகலா. தலைமை வகித்து தொடங்கிவைத்தாா் வழக்கிற... மேலும் பார்க்க