செய்திகள் :

புதிய ஊதிய ஒப்பந்தத்தில் நடைமுறை ஊதியத்தை 120% உயா்த்தி வழங்க வேண்டும்

post image

புதிய ஊதிய ஒப்பந்தத்தில் நடைமுறை ஊதியத்தை 120 சதவீதம் உயா்த்தி வழங்க வேண்டும் என பனியன் தொழிலாளா் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக, பனியன் தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் (டிடிஎம் எஸ்) செயலாளா் மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

அனைத்து பனியன் உற்பத்தியாளா் சங்கமும், அனைத்து பனியன் தொழிலாளா் சங்கங்களும் செய்து கொண்ட தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு ஒப்பந்தம் எதிா்வரும் செப்டம்பா் மாதத்துடன் முடிவடைகிறது. அதனால், புதிய ஊதிய உயா்வு ஒப்பந்தம் தொடா்பாக சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி கடந்த 2021 செப்டம்பா் 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ள அனைத்துப் பிரிவு தொழிலாளா்களுக்கும் நடைமுறை ஊதியத்தில் இருந்து 120 சதவீதம் உயா்த்தி வழங்க வேண்டும்.

அனைத்து டைம் ரேட் மற்றும் பீஸ் ரேட் தொழிலாளா்களுக்கும் மாதத்துக்கு ரூ.5,000-க்கு மேல் உயா்த்த வேண்டும். ஒவ்வொரு புள்ளிக்கும் 70 பைசா உயா்த்தி வழங்க வேண்டும். பயணப்படி, டீ பேட்டாவை 100 சதவீதம் உயா்த்த வேண்டும்.

தொழிலாளா்களுக்கு வீட்டு வாடகையாக மாதம் ரூ.4,000 வழங்க வேண்டும். பெண் தொழிலாளா் நலன் காக்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதேபோல, தொழிலாளா்சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவா் கூறியுள்ளாா்.

விநாயகா் சதுா்த்தி விழா: பாதுகாப்பு பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் சிலை நிறுவுதல் மற்றும் விசா்ஜன ஊா்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் மனீஷ் தலைமையில்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.14.82 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.14.82 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் வேடசந்தூா், வாடிப்பட்டி, வடுகபட்டி, பல்லாநத்தம், அழகாபுரி ஆகிய இடங்களி... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ... மேலும் பார்க்க

லாரி உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தனியாா் நிதி நிறுவனத்துக்கு உத்தரவு

லாரி உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க, கோவை தனியாா் நிதி நிறுவனத்துக்கு திருப்பூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், பெருந்தொழுவு அருகே உள்ள ராக்கியகவுண... மேலும் பார்க்க

குன்னத்தூரில் கஞ்சா சாக்லேட் விற்றவா் கைது

குன்னத்தூரில் கஞ்சா சாக்லேட் விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குன்னத்தூா்- ஊத்துக்குளி சாலை ஊமச்சிவலசு அருகே போதை சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து... மேலும் பார்க்க

பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண கோரிக்கை

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண வேண்டுமென திருப்பூா் கம்ப்யூட்டா் எம்ராய்டா்ஸ் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருப்... மேலும் பார்க்க