செய்திகள் :

கேரளா: நடிகை உள்ளிட்டோர் பாலியல் புகார்; பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏ; பின்னணி என்ன?

post image

கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ராகுல் மாங்கூட்டத்தில். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாலக்காடு சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஷாபி பறம்பில் போட்டியிட்டு எம்.பி-ஆனார். அதைத்தொடர்ந்து பாலக்காடு சட்டசபைத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்த ராகுல் மாங்கூட்டத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார்.

இந்த நிலையில் அவர்மீது சில இளம் பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ராகுல் மாங்கூட்டத்தில் மீது புகார்கள் கிளம்பின. ஒரு இளம் நடிகையிடம் கருவைக் கலைக்கும்படி ராகுல் மாங்கூட்டத்தில் வற்புறுத்தும் ஆடியோ ஒன்று நேற்று வெளியாகி இருந்தது.

அதைத்தொடர்ந்து நடிகை ரினி ஆன் ஜார்ஜ் என்பவர் ராகுல் மாங்கூட்டத்தில் தன்னை கொச்சியில் உள்ள ஸ்டார் ஓட்டலுக்குத் தவறான எண்ணத்துடன் அழைத்ததாகப் பேட்டி அளித்துப் பரபரப்பைக் கிளப்பினார்.

நடிகை ரினி ஆன் ஜார்ஜ்
நடிகை ரினி ஆன் ஜார்ஜ்

இது பற்றி நடிகை ரினி ஆன் ஜார்ஜ் கூறுகையில், "கடந்த பிப்ரவரி மாதம் வரை அந்த இளம் தலைவர் எனக்கு மெசேஜ் அனுப்பினார். தவறான எண்ணத்துடன் எனக்கு நிறைய ஆபாச மெசேஜ்களை அனுப்பினார். அவர் இதுபோன்று பல பெண்களைத் தவறான எண்ணத்துடன் அணுகியுள்ளார். அவர்கள் தைரியமாகப் புகார் அளிக்க முன்வரவேண்டும்" என்றார்.

இந்த நிலையில் இளம்பெண்ணைக் கர்ப்பிணியாக்கிவிட்டு, கருவைக் கலைக்கும்படி வற்புறுத்திய ராகுல் மாங்கூட்டத்தில் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஷின்றோ செபாஸ்டின் என்பவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையே தன்மீது யாரும் சட்டரீதியாகப் புகார் அளிக்கவில்லை என ஏற்கனவே கூறிவந்த ராகுல் மாங்கூட்டத்தில் தனது இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது பற்றி ராகுல் மாங்கூட்டத்தில் கூறுகையில், "நான் குற்றம் செய்ததால் ராஜினாமா செய்யவில்லை. யாரும் என்னை ராஜினாமா செய்ய வலியுறுத்தவும் இல்லை. என்னைக் குறித்த விவாதத்தால் காங்கிரஸ் நிர்வாகிகளின் நேரத்தை விரயம் செய்ய வேண்டாம். காங்கிரஸ் தலைவர்களின் நேரத்தை மதித்து நான் ராஜினாமா செய்கிறேன். புகார் கூறிய இளம் நடிகை என்னுடைய தோழியாவார். அவர் எனக்கு எதிராகக் குற்றச்சாட்டு கூறியதாக நான் கருதவில்லை" என்றார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ ராகுல் மாங்கூட்டத்தில்

இதுகுறித்து நடிகை ரினி ஆன் ஜார்ஜ் கூறுகையில், "பெண்களுக்காகத்தான் நான் குரல் கொடுத்தேன். அந்த நபர் திருந்த வேண்டும். பெண்கள் புகார் அளிக்க முன்வரும்போது சமூகம் அதை ஏற்றுக்கொண்டு, உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். நான் ஒரு தனிநபரைக் குறிப்பிட்டோ, ஒரு கட்சியைக் குறிப்பிட்டோ குற்றச்சாட்டு கூறவில்லை. ஆனால், அரசியல்கட்சி தலைவர்கள் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

TVK மதுரை மாநாடு: "அதிமுக தொண்டர்கள் மனவேதனையில் உள்ளனரா?" - விஜய்க்கு ஆர்.பி.உதயகுமார் பதில்

தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `அபகரிப்பு’ புகாரில் திமுக அவைத்தலைவர் சிவக்குமார்; களமிறங்கிய கவர்னர்; பின்னணி என்ன?

புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் வீடுகளையும், சொத்துக்களையும், ரௌடிகள் மற்றும் போலிப் பத்திரங்கள் மூலம் அபகரிப்பது தொடர் கதையாகி வருகிறது. அபகரிப்பில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் அரசியல... மேலும் பார்க்க

TVK மதுரை மாநாடு: ”தமிழகத்தில் தாமரை மலரப்போகிறது; அதை தம்பி விஜய் பார்ப்பார்" - தமிழிசை காட்டம்

நெல்லை​யில் இன்று நடை​பெறும் பா.ஜ.க பூத் கமிட்டி மண்டல மாநாட்​டில் மத்திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா பங்​கேற்​றுப் பேசுகிறார். இதில் பங்கேற்பதற்காக பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையிலிரு... மேலும் பார்க்க

நெல்லை: அமித் ஷா வருகை; ஆதரவு, எதிர்ப்பு, பரபரப்பு... நயினார் நாகேந்திரன் வீட்டில் தேநீர் விருந்து

நெல்லைக்கு வருகை தரும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை வரவேற்க பாரதிய ஜனதா மற்றும் அ.தி.மு.க-வினர் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் தி.மு.க சார்பாக நகரம் முழுவதும் எதிர்ப்பு போஸ்டர்கள் ஒட்டப்... மேலும் பார்க்க

‘Vote Chori’ Row : `இக்கட்டில் சிக்கியுள்ளது வாக்காளரின் அதிகாரம்!' - இரா.சிந்தன்

மாநிலக் குழு உறுப்பினர், சி.பி.ஐ(எம்)கட்டுரையாளர்: இரா.சிந்தன்"தேர்தல் ஆணையர் என்பவர், தேசக் கட்டமைப்பின் ஒரு பகுதி. ஆனால் அவர் அரசாங்கத்தின் ஒரு பகுதி அல்ல!" முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சே... மேலும் பார்க்க

காவல்துறையின் மெசேஜ்; கோட்டைவிட்ட பவுன்சர்கள்! - தவெக மாநாடு சீக்கிரமே முடிந்தது ஏன்?

மதுரையில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார் விஜய். மதுரை மாநாட்டுக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பே ஏற்பாடுகளை செய்திருந்தனர். விக்கிரவாண்டி மாநாட்டை விட பிரமாண்டமாக இந்த மாநாட்... மேலும் பார்க்க