செய்திகள் :

"புதிய நடிகர்களே கோடிகளில் சம்பளம் கேட்கிறார்கள்" - ஜூன் 1 முதல் மலையாள சினிமா படப்பிடிப்புகள் ரத்து

post image

மலையாள சினிமாவில் நடிகர்களுடைய சம்பளம் அதிகமாக உள்ளதால், அதைக் குறைக்க வேண்டும் எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்புக்கு நான்கு மாதங்களுக்கு முன் கடிதம் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் நடிகர்களின் சம்பளமும், ஜி.எஸ்.டி-யும் அதிகமாக உள்ளதாகக் கூறி, ஜூன் 1-ம் தேதி முதல் படப்பிடிப்புகளை நிறுத்தப்போவதாகத் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். கேரள மாநிலம் கொச்சியில் சினிமா சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் ஜூன் 1-ம் தேதி முதல் படப்பிடிப்புகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சினிமா தயாரிப்பாளர் ஜி.சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மலையாளத்தில் கடந்த ஆண்டு 176 சினிமாக்கள் பாக்ஸ் ஆப்பீஸில் தோல்வியடைந்தன. ஜனவரி மாதம் மலையாள சினிமாவில் 101 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ரிலீஸான 28 சினிமாக்களில் 'ரேகாசித்திரம்' என்ற சினிமா மட்டுமே வருவாய் ஈட்டியுள்ளது.

மலையாள சினிமா

சினிமா தயாரிப்புச் செலவில் 60 சதவிகிதம் நடிகர், நடிகைகளின் சம்பளத்துக்கே சென்றுவிடுகிறது. மலையாள சினிமாவில் நடிகர், நடிகைகளின் சம்பளம் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது. அவர்களிடம் ஒரு நேர்மையும் இல்லை. புதிய நடிகர்களும் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கின்றனர். தொழில்நுட்பப் பணியாளர்களில் 60 சதவிகிதத்தினர் பட்டினியில் வாடுகின்றனர். 50 நாட்களில் முடிக்க வேண்டிய படப்பிடிப்பை 150 நாட்கள் நீட்டிக்கின்றனர்.

நடிகர்கள் வாங்கும் சம்பளத்தின் 10 சதவிகிதம்கூட தியேட்டர்களில் வசூல் ஆவது இல்லை. மலையாளத்தில் இதுவரை 100 கோடி வசூலித்த ஒரு சினிமாகூட இல்லை.

மலையாள சினிமா

அரசு ஒரு உதவியும் செய்யவில்லை. ஓடிடி வியாபாரமும் நடைபெறவில்லை. எனவே ஜூன் 1-ம் தேதி முதல் சினிமா வேலை நிறுத்த போராட்டம் உறுதியாக நடைபெறும். படப்பிடிப்பும், ஒளிபரப்பும் நிறுத்தப்படும். ஒருவிதத்திலும் சினிமா எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  30 சதவீதம் ஜி.எஸ்.டி செலுத்தி எந்த தொழிலை நடத்த முடியும்? 

ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரி ஆகியவற்றைத் திரும்பப்பெற வேண்டும். சினிமா நடிகர், நடிகைகள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும்" என்றார்.

கொரோனாவுக்குப்பின் சினிமா சற்று மீண்டு வரும் நிலையில் தயாரிப்பாளர்களின் போராட்ட அறிவிப்பு மலையாள சினிமாவில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Parvathy: ``என் காதல் உடைந்து போனதற்கான காரணம் இதுதான்'' -நடிகை பார்வதி

மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக பணி செய்து, 2006-ல் `Out of syllabus' என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர் பார்வதி.2008-ல் அசர வைக்கும் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி 'பூ... மேலும் பார்க்க

Ponman Review: 'கல்யாண வீட்டில் திக்... திக்... திக்...' - பேசில் ஜோசப்பின் 'பொன்மேன்' மின்னுகிறதா?

கொல்லத்தைச் சேர்ந்த ப்ரூனோ (ஆனந்த் மன்மதன்), தனது சகோதரி ஸ்டெஃபி (லிஜோமோல் ஜோஸ்) மற்றும் தாயுடன் (சந்தியா ராஜேந்திரன்) வாழ்ந்து வருகிறார். தனது மகள் ஸ்டெஃபியின் திருமணத்திற்கு நகை சேர்ப்பதற்கு அரும்பா... மேலும் பார்க்க

L2 Empuraan: ``ரஜினி சார் படத்தை இயக்க வேண்டியது; ஆனால்...'' - ப்ரித்விராஜ் ஓப்பன் டாக்

மோகன் லால் நடித்துள்ள `எல்2; எம்புரான்' படம் மார்ச் மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.ப்ரித்விராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. முதல் பாகத்திற்க... மேலும் பார்க்க

Dominic and the Ladies' Purse Review: மெர்சல் மம்மூட்டி, மலையாளத்தில் கௌதம் மேனன்; கூட்டணி வென்றதா?

முன்னாள் காவல்துறை அதிகாரியான சி.ஐ. டோமினிக், தற்போது கொச்சியில் தனியார் டிடெக்ட்டிவ் ஏஜென்சி ஒன்றை நடத்தி வருகிறார். அவர் அளித்த விளம்பரத்தைப் பார்த்து உதவியாளராகச் சேர வந்த விக்கி (கோகுல் சுரேஷ்) என... மேலும் பார்க்க

Basil Joseph : `மோஸ்ட் வான்டட் இளம் நடிகர்' - மாலிவுட்டை கலக்கும் பேசில் ஜோசப்!

இயக்குநராக களமிறங்கி நடிகராக உருவெடுத்து ஜொலித்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.அந்த லிஸ்ட்டில் தற்போது முக்கியமான இடத்தைப் பிடித்து அமர்ந்திருக்கிறார் மக்களின் ப்ரிய்த்திற்குரிய சேட்டன் பேசில் ஜோசப். சினி... மேலும் பார்க்க