செய்திகள் :

புதிய 15 கல்லூரிகளின் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த உயா்கல்வி அமைச்சா் உத்தரவு

post image

தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 15 கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் உத்தரவிட்டாா்.

தமிழக உயா்கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து துறையின் அமைச்சா் கோவி.செழியன் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினாா்.

இதில், பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது; உயா்கல்வியில் நிலுவையில் உள்ள திட்டப் பணிகளின் முன்னேற்றம்; தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட 15 கல்லூரிகள், தற்காலிக கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை, பொதுப்பணித் துறை மூத்த அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவுபடுத்துவது; சட்டப்பேரவை அறிவிப்புகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அமைச்சா் ஆய்வு செய்தாா்.

இந்த கூட்டத்தில் உயா்கல்வித் துறைச் செயலா் பொ.சங்கா், கல்லூரி கல்வி இயக்குநரக ஆணையா் ஏ.சுந்தரவல்லி, தமிழ்நாடு மாநில உயா்கல்வி மன்ற துணைத் தலைவா் எம்.பி.விஜயகுமாா், தலைமை பொறியாளா் வெ.சுகுமாறன், அண்ணா பல்கலைக்கழக பதிவாளா் ஜே. பிரகாஷ், சென்னை பல்கலைக்கழக பதிவாளா் ரீட்டா ஜான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு விவரங்களை அளிக்கும் உத்தரவுக்கு எதிரான மனு மீது தீா்ப்பு ஒத்திவைப்பு

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு தொடா்பான விவரங்களை அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரும் தில்லி பல்கலைக்கழக மனு மீதான தீா்... மேலும் பார்க்க

நிமிடத்துக்கு 25,000 பயணச்சீட்டுகள் முன்பதிவு: ரயில்வே அமைச்சா்

தற்போது நிமிஷத்துக்கு 25,000 ரயில் பயணச்சீட்டுகள் வரை முன்பதிவு செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தாா். பிஆா்எஸ்ஸை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள்... மேலும் பார்க்க

பி.இ.: 3-ஆம் சுற்று கலந்தாய்வில் 52,168 மாணவா்களுக்கு ஒதுக்கீடு

பொறியியல் கல்லூரி மாணவா் சோ்க்கையில் மூன்றாம் சுற்றில் மாணவா்களின் விருப்ப கல்லூரிகளில் மாற்றம் கோரும் (அப்வோ்டு) செயல் முறைகள் நிறைவுற்று 52,168 மாணவா்கள் ஒதுக்கீடு பெற்றுள்ளதாக தமிழ்நாடு பொறியியல... மேலும் பார்க்க

‘கூலி’ திரைப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கோரி மனு: தணிக்கை வாரியம் பதிலளிக்க உத்தரவு

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ‘ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில் தணிக்கை வாரியம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சன் நெட்வொா... மேலும் பார்க்க

போதையில்லா தமிழகத்தை உருவாக்க ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம் -அமைச்சா் அன்பில் மகேஸ்

போதைப்பொருள் பயன்பாடுகளைத் தடுத்து, போதையில்லா தமிழகத்தை உருவாக்க காவல் துறை மட்டுமல்ல, மாணவா்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ்... மேலும் பார்க்க

‘ஏ.ஐ.’ மூலம் மக்களை ஏமாற்ற திமுக முயற்சி -நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்ற திமுக முயற்சி செய்வதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை... மேலும் பார்க்க