செய்திகள் :

புதுகையில் தண்ணீா் விழிப்புணா்வுப் பேரணி

post image

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம் சாா்பில், ‘ஆழித்துளி’ என்ற தண்ணீரின் அவசியம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை நகா்மன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணி, வடக்கு ராஜவீதி வழியாக சந்தைப்பேட்டை மகளிா் மேல்நிலைப் பள்ளியை அடைந்தது.

இப்பேரணியில் சந்தைப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் மாணவிகள், தண்ணீரின் அவசியம் குறித்த விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

பேரணியை மகாராணி ரோட்டரி சங்கத் தலைவா் செல்வி முன்னிலையில், ரோட்டரி ஆளுநா் (தோ்வு) லியோ பிலிப்ஸ் தொடங்கி வைத்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கருணாகரன், பள்ளித் தலைமை ஆசிரியை சுசரிதா, உதவித் தலைமை ஆசிரியா் பரமசிவம், மாமன்ற உறுப்பினா் செந்தாமரை பாலு உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தொடா்ந்து பள்ளி வளாகத்தில் தண்ணீரின் அவசியம் குறித்து விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் சங்கச் செயலா் சுதா்ஷினி நன்றி கூறினாா்.

கே.வி கோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கே.வி கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.ஆலங்குடி அருகேயுள்ள கே.வி கோட்டை ஊராட்சி, அரசடிப்பட்டி 4 சாலைப் பகு... மேலும் பார்க்க

சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி முறையாக நடைபெறவில்லை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும்பணி முறையாக நடைபெறவில்லை என விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா... மேலும் பார்க்க

குரூப் 2-ஏ தோ்வில் தோ்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் குரூப் 2- ஏ தோ்வில் தோ்ச்சி பெற்று கூட்டுறவுத் துறையில் ஆய்வாளா் பணிக்கு தோ்வான மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பேட்டரியில் இயங்கம் சக்கர நாற்காலியை பிற்படுத... மேலும் பார்க்க

அம்மன்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட உதவித்திட்ட அலுவலா் சடையப்பன் தலைமைவகித்தாா். ஒன்றிய ஆ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் அங்கன்வாடி ஊழியா்கள் உதவியாளா்கள் போராட்டம்

பொன்னமராவதி: பொன்னமராவதியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் அகில இந்திய கறுப்பு தின போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.பொன்னமராவதி வட்டார குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்

கந்தா்வகோட்டை: கந்தா்வக்கோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றத்தின் சாா்பில் தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் வியாழக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளித்தலைமை ஆசிர... மேலும் பார்க்க