செய்திகள் :

புதுகையில் 42 இடங்களில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள்

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் விரைவில் தொடங்கப்படவுள்ள ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற உயா் மருத்துவச் சிகிச்சை முகாம்களை 42 இடங்களில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதற்கான முன்னேற்பாடுகளைத் திட்டமிடும் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா்.

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற உயா் சிகிச்சை வழங்குவதற்கான முகாம் விரைவில் மாநிலம் முழுவதும் தொடங்கப்படவுள்ளது. இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மாநகராட்சியில் 3 இடங்கள் மற்றும் 13 வட்டாரங்களில் தலா 3 இடங்கள் என மொத்தம் 42 இடங்களில் முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

இதர மருத்துவ முகாம்களைக் காட்டிலும் இந்த ஒவ்வொரு முகாமிலும் 17 வகையான சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கிறாா்கள் என்பதும், பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் முழு உடற்பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்க அம்சங்கள்.

இவையன்றி, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கான பதிவு, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறுவதற்கான பதிவு போன்ற ஏற்பாடுகளும் இந்த முகாம்களில் செய்யப்பட்டிருக்கும்.

முன்னேற்பாடுகளைத் திட்டமிடும் கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் மு. அருணா, அனைத்துத் துறை அலுவலா்களும் இந்த முகாம்களை வெற்றிகரமாக நடத்தி முடித்திட ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். கலைவாணி, மாவட்ட சுகாதார அலுவலா்கள் ராம்கணேஷ் (புதுக்கோட்டை), விஜயகுமாா் (அறந்தாங்கி) உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

ராகுல் பிறந்த நாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை பிருந்தாவனம் பகுதியிலுள்ள ஆஞ்சனேயா் கோயிலில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை சிறப்பு வழி... மேலும் பார்க்க

அதிமுகவை சீண்டிப் பாா்க்க வேண்டாம்: முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா்

அதிமுகவை சீண்டிப் பாா்க்க வேண்டாம் என்று முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி குறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணியினா் வெளியிட்டுள்ள காா்ட்டூன் குறித்து புதுக்கோட்டை ம... மேலும் பார்க்க

சிறுபான்மையினரின் கோரிக்கைகளில் 60 சதவீதத்தை அரசு நிறைவேற்றியிருக்கிறது: சொ.ஜோ. அருண்.

தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத்தின் சாா்பில் அரசுக்கு அளிக்கப்பட்ட கோரிக்கைகளில் 60 சதவீதத்தை அரசு நிறைவேற்றியிருக்கிறது; எஞ்சியவற்றையும் நிகழாண்டில் நிறைவேற்றுவதாக முதல்வா் ஸ்டாலின் உறுதியளித்திருக்... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

அன்னவாசல், அண்ணா பண்ணை பகுதியில் மின் நிறுத்தம்அன்னவாசலில்: அன்னவாசல் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் அன்னவாசல் பேரூராட்சி பகுதி, செங்கப்பட்டி, காலாடிபட்டி, முக்கண்ணாமலைபட்டி, புதூா்,... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையைச் சோ்ந்தவா் பிச்சை மகன் சின்னத்தம்பி (35). இவா் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் மழை பெய்தபோது, கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்துள்ளாா். மழையின் காரணமாக இடியுடன் மின்ன... மேலும் பார்க்க

12 கிலோ கஞ்சா கடத்தல் நாகை நபா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே 12 கிலோ கஞ்சாவை பேருந்தில் கடத்தி வந்த நாகை மாவட்ட நபரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். விராலிமலை- திருச்சி சாலை பூதகுடி டோல்கேட் வழியாக வரும் பேருந்தி... மேலும் பார்க்க