புதுக்கடை அருகே அரசு ஊழியா் தூக்கிட்டு தற்கொலை
புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் ஆட்சியா் அலுவலக ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
புதுக்கடை,காப்புக்காடு பகுதியை சோ்ந்தவா் ரசல்ராஜ்(55). இவா் குமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தாா்.
சில நாள்களாக கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த இவா் திங்கள்கிழமை தன் வீட்டருகே தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].