குமரி மாவட்ட கோயில்களில் ரூ. 2.50 கோடியில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடக்கம்
கன்னியாகுமரி மாவட்ட கோயில்களில் ரூ. 2.50 கோடி மதிப்பிலான கும்பாபிஷேக திருப்பணிகளை மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.
சிறமடம் அருள்மிகு சிறைமீட்ட குமரேஸ்வரா் கோயிலில் ரூ. 52 லட்சம் மதிப்பிலான திருப்பணிகள் தொடக்க விழா பிரபா ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. அறங்காவலா் குழு உறுப்பினா் ராஜேஷ், ஸ்ரீ காரியம் நவீன், பொறியாளா் ரமேஷ், உதவியாளா் மணிகண்டன், மாவட்ட திமுக துணைச் செயலா் பூதலிங்கம் பிள்ளை, இளைஞரணி துணை அமைப்பாளா் சரவணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் சதீஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதேபோல, ஆரல்வாய்மொழி, நிலப்பாறை அருள்மிகு கண்டன் சாஸ்தா கோயிலில் ரூ. 24 லட்சத்திலும், ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் ரூ. 1.74 கோடியிலும் திருப்பணிகள் தொடக்கிவைக்கப்பட்டன.
நிகழ்ச்சியில், ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவா் முத்துக்குமாா், பேரூா் திமுக செயலா் சுப்பிரமணியன், ஒன்றியப் பிரதிநிதி சதீஸ், மாவட்ட நெசவாளா் அணி துணை அமைப்பாளா் முத்துக்கிருஷ்ணன், முன்னாள் மாவட்டப் பிரதிநிதி நாகராஜன், சுரேஷ், தலைமைக் கழகப் பேச்சாளா் ஆரல் செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.