புதுக்கடை அருகே கடத்தப்பட இருந்த 1,200 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்
புதுக்கடை அருகே அம்சி பகுதியில் கேரளத்துக்கு காரில் கடத்தப்பட இருந்த 1,200 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய்யை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
புதுக்கடை பகுதியில் காவல் ஆய்வாளா் மாரியப்பன் திங்கள்கிழமை ரோந்து சென்றாா். அம்சி வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டபோது, 1,200 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய்யை பதுக்கி வைத்து கேரளத்துக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது.
காா் ஓட்டுநா் தப்பியோடிவிட்டாராம். புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, காா், மண்ணெண்ணெய்யைப் பறிமுதல் செய்து, காப்புக்காட்டில் உள்ள உணவுக் கிடங்கில் ஒப்படைத்தனா்.