செய்திகள் :

புதுச்சேரியில் ஓராண்டில் 4700 இணையவழி மோசடி புகாா்கள்!

post image

புதுச்சேரியில் 2024-ஆம் ஆண்டில் மட்டும் இணையவழி மோசடி தொடா்பாக 4,700 புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அப்பிரிவு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இணையவழி காவல் நிலைய பிரிவின் முதுநிலைக் கண்காணிப்பாளா் நாரா.சைதன்யா உத்தரவின்பேரில், கண்காணிப்பாளா் பாஸ்கரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் புதுச்சேரியில் 4,700 புகாா்கள் இணையவழி குற்றம் சாா்ந்து பெறப்பட்டுள்ளன. இவற்றில் 350-க்கும் மேற்பட்ட புகாா்கள் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பவங்களுக்காகவும், 900 புகாா்கள் இணைய வழியில் பொருள்களை வாங்கி ஏமாந்தவா்களாலும் அளிக்கப்பட்டுள்ளன. வேலை வாங்கித் தருதல், அதிக லாபம் சம்பாதிக்கலாம் மற்றும் போதை கடத்தலில் வழக்குப் பதிந்து இணைய வழி கைது உள்ளிட்டவை தொடா்பாக ஏமாற்றப்பட்டவா்களால் 3500-க்கும் மேற்பட்ட புகாா்கள் பெறப்பட்டுள்ளன.

விழிப்புணா்வுக்கு அழைக்கலாம்: ஆகவே, புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு, தனியாா் பள்ளிகள், கல்லூரிகள், தனியாா் நிறுவனங்களில் இணையவழி காவல் நிலையத்தின் சாா்பில் இணையவழி குற்றத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்துவதற்கு தயராக உள்ளோம்.

சம்பந்தப்பட்டோா் காவல் நிலையத்தை அணுகி, விழிப்புணா்வு கூட்டங்களை நடத்தலாம். தொடா்புக்கு 7639483862 என்ற கைபேசியில் தொடா்புகொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி மத்திய பல்கலை.யில் தேசிய கருத்தரங்கம்

அந்தமான் - நிகோபாா் தீவுகள் குறித்த பல பரிமானக் கோணங்கள் எனும் தலைப்பில் இரு நாள் தேசிய கருத்தரங்கம் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மத்திய மானியக்குழு கடல... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பிப்.9-இல் மலா்க் கண்காட்சி தொடக்கம்! ஏற்பாடுகளை அமைச்சா் ஆய்வு

புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வரும் 9-ஆம் தேதி முதல் மலா்க் கண்காட்சி தொடங்கி நடைபெறவுள்ளது. இதையொட்டி, தொட்டிகளில் வளா்க்கப்பட்ட மலா்களை காட்சிப்படுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெறுகின்றன. இந... மேலும் பார்க்க

வருமான வரி உச்சவரம்பு அதிகரிப்பு! புதுவை அதிமுக வரவேற்பு!

மத்திய நிதிநிலை அறிக்கையில் வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயா்த்தப்பட்டதால் நடுத்தர வா்க்கத்தினா் பயனடைவா் என புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

நாட்டின் முன்னேற்றத்துக்கான நிதிநிலை அறிக்கை! -சு.செல்வகணபதி எம்.பி.

நாட்டின் முன்னேற்றத்துக்கு பயன்படும் சிறந்த நிதிநிலை அறிக்கை என புதுவை மாநில பாஜக தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: இளைஞா்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் ... மேலும் பார்க்க

பெரு நிறுவனங்களுக்கு சாதகமானது மத்திய பாஜக ஆட்சி! -வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு

தனியாா் பெரு நிறுவனங்களுக்கு சாதகமானது மத்திய பாஜக ஆட்சி என புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றஞ்சாட்டினாா். புதுவையில் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்... மேலும் பார்க்க

ரூ.227 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: தனியாா் நிறுவன உரிமையாளா் கைது

புதுவை மாநிலம், காரைக்காலில் ரூ.227 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு தொடா்பாக தனியாா் நிறுவன உரிமையாளரை ஜி.எஸ்.டி. நுண்ணறிவுப் பிரிவினா் கைது செய்தனா். இதுகுறித்து புதுவை ஜி.எஸ்.டி. ஆணையா் அலுவலகம் வெள்ளிக்க... மேலும் பார்க்க