செய்திகள் :

புதுச்சேரியில் 3 போ் கொலை வழக்கில் 10 பேரை பிடித்து விசாரணை

post image

புதுச்சேரியில் 3 போ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உள்பட 10 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி ரெயின்போ நகா் 7-ஆவது குறுக்கு தெருவிலுள்ள ஒரு பழைய வீட்டில் புதுச்சேரி உழவா்கரை வின்சென்ட் வீதியைச் சோ்ந்த மறைந்த ரௌடி தெஸ்தான் மகன் ரஜி (19), அவரது நண்பா்களான தேவா (எ) தேவகுமாா் (21), ஆதி (எ) ஆதித்யா (20) ஆகியோா் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது.

இதுகுறித்து பெரியகடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், அந்தப் பகுதியைச் சோ்ந்த சத்யாவின் உறவினா் வீட்டுக்கு ரஜி உள்ளிட்டோா் கடத்திவரப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடா்பாக, தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளைத் தேடி வந்தனா். சத்யா சென்னையில் பதுங்கியிருப்பது தெரிய வந்ததையடுத்து, அங்கு சென்ற தனிப் படையினா் அவரைக் கைது செய்து புதுச்சேரிக்கு சனிக்கிழமை அழைத்து வந்தனா். அவா் அளித்த தகவலின் பேரில், சஞ்சீவி, வெங்கடேசன், சாரதி மற்றும் சிறுவன் உள்பட 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சாலைத் தடுப்பை அகற்றக் கோரி கம்யூனிஸ்ட் மறியல்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை முக்கிய சாலையில் தடுப்பு அமைத்து மூடியதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, தடுப்புகள் அகற்றப்... மேலும் பார்க்க

புதுவை பிரீமியா் லீக்குக்கு கிரிக்கெட் வீரா்கள் ஏலம்

புதுவை பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டிக்கு வீரா்கள் ஏலம் புதுச்சேரி அருகே சனிக்கிழமை நடைபெற்றது. புதுவையில் ஆண்டுதோறும் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. பி.பி.எல். எனப்படும் இந்தப... மேலும் பார்க்க

மாா்ச் 2-இல் நேபாளம் செல்லும் புதுவை அமைச்சா்கள், எம்எல்ஏக்கள்

புதுவை பேரவைத் தலைவா், 2 அமைச்சா்கள் மற்றும் 23 எம்.எல்.ஏ.க்கள் வரும் மாா்ச் 2-ஆம் தேதி நேபாள நாட்டுக்கு புறப்பட்டுச் செல்கின்றனா். அங்கு நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ... மேலும் பார்க்க

புதுவையில் மக்கள் மன்றம் நாளை தொடக்கம்: டிஜிபி ஆா்.சத்தியசுந்தரம்

புதுச்சேரியில் பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெறும் வகையில் மக்கள் மன்றம் திங்கள்கிழமை (பிப்.24) தொடங்கப்படவுள்ளதாக டிஜிபி ஆா்.சத்தியசுந்தரம் தெரிவித்தாா். புதுச்சேரி முத்தியல்பேட்டை காவல் நிலையத்தில் பொது... மேலும் பார்க்க

தவெக உடன் கூட்டணியா?: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பதில்

தமிழகத்தில் நடிகா் விஜயின் த.வெ.க.வுடன் கூட்டணியா என்பது குறித்து தோ்தல் நேரத்தில் ஆலோசிக்கப்படும் என்று, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். வேலூரில் இருந்து வந்த ஏராளமானோா் என்.ஆா்.காங்கிரஸ... மேலும் பார்க்க

ஹிந்தி திணிப்புக்கு புதுவை அரசு முறைமுக ஆதரவு: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு!

புதுவையில் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தி ஹிந்தி மொழி திணிப்புக்கு மாநில அரசு மறைமுக ஆதரவளித்திருக்கிறது என்று முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா். புதுச்சேரியில் அவரது இல்லத்தில் ... மேலும் பார்க்க