செய்திகள் :

புதுச்சேரி ஆளுநரின் முகாம் அலுவலகத்துக்கு 6-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

post image

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள துணைநிலை ஆளுநரின் முகாம் அலுவலகமான ராஜ்நிவாஸுக்கு 6-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் திங்கள்கிழமை விடுக்கப்பட்டதையடுத்து போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

புதுச்சேரியில் உள்ள பாரதி பூங்கா அருகே துணைநிலை ஆளுநரின் தனி முகாம் அலுவலகமான ராஜ்நிவாஸ் அமைந்துள்ளது.

ராஜ்நிவாஸுக்கு மின்னஞ்சல் மூலம் கடந்த சில வாரங்களில் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டலை மா்ம நபா் அனுப்பி வருகிறாா். ஏற்கெனவே முதல்வா் வீடு, ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், ராஜ்நிவாஸுக்கும் 5 தடவை வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை ராஜ்நிவாஸ் அலுவலக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து வெடிகுண்டு கண்டறியும் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டா் சாதனங்களுடன் பெரியகடை போலீஸாா் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினா் ராஜ்நிவாஸில் பல மணிநேரம் சோதனையிட்டனா். அதன்பின் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்ததையடுத்து போலீஸாா் அங்கிருந்து சென்றனா்.

புதுச்சேரியில் இஎஸ்ஐ மாதிரி மருத்துவமனை: முதல்வா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

புதுச்சேரியில் இஎஸ்ஐ மாதிரி மருத்துவமனை அமைப்பதற்காக, முதல்வா் என்.ரங்கசாமி, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் ஆகியோா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு ஆவணங்களைப் பரிமா... மேலும் பார்க்க

திருக்கனூா் ஆரம்ப சுகாதார மையத்தை மேம்படுத்த கோரிக்கை

புதுச்சேரி திருக்கனூா் ஆரம்ப சுகாதார மையத்தை மேம்படுத்தக் கோரி உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயத்திடம் திங்கள்கிழமை வலியுறுத்திய மருத்துவா்கள், அதிகாரிகள். புதுச்சேரி, மே 19: புதுச்சேரி அருகே திருக்கனூா்... மேலும் பார்க்க

புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் மாா்க்கெட் கிளை மாநாடு

புதுச்சேரி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பெரிய மாா்க்கெட் கிளை மாநாடு மற்றும் புதிய நிா்வாகிகள் தோ்வு ரங்கம்பிள்ளை வீதியில் உள்ள தனியாா் கட்டடத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு இந்திய கம்யூன... மேலும் பார்க்க

புதுவையில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கை: விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கை நடைபெறுவதாக கல்வித் துறை இணை இயக்குநா் வெ.கோ.சிவகாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குற... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் பதுங்கல்: 8 போ் கைது

புதுச்சேரி: புதுச்சேரி அருகே அரியாங்குப்பம் பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 8 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதி அம்பேத்கா் நகா் காலனி அருகே சிலா் சந்தேகத்... மேலும் பார்க்க

புதுவை தொழில்நுட்பப் பல்கலை: தாமதமின்றி ஓய்வூதியம் வழங்க கோரிக்கை

புதுச்சேரி: புதுவை தொழில்நுட்பப் பல்கலை.யில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கான ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஓய்வு பெ... மேலும் பார்க்க