செய்திகள் :

புதுவையில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கை: விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

post image

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கை நடைபெறுவதாக கல்வித் துறை இணை இயக்குநா் வெ.கோ.சிவகாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவையில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் 2025-2026 கல்வி ஆண்டில் புதுச்சேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேருவதற்குரிய விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் திங்கள்கிழமை (மே 19) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை நிறைவு செய்து வரும் 23 ஆம் தேதிக்குள் அந்தந்த அரசுப் பள்ளிகளில் வழங்க வேண்டும். மாணவ, மாணவியா் ஒன்றுக்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விண்ணப்பத்தைப் பெற்று நிறைவு செய்து, இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறாா்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இஎஸ்ஐ மாதிரி மருத்துவமனை: முதல்வா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

புதுச்சேரியில் இஎஸ்ஐ மாதிரி மருத்துவமனை அமைப்பதற்காக, முதல்வா் என்.ரங்கசாமி, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் ஆகியோா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு ஆவணங்களைப் பரிமா... மேலும் பார்க்க

திருக்கனூா் ஆரம்ப சுகாதார மையத்தை மேம்படுத்த கோரிக்கை

புதுச்சேரி திருக்கனூா் ஆரம்ப சுகாதார மையத்தை மேம்படுத்தக் கோரி உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயத்திடம் திங்கள்கிழமை வலியுறுத்திய மருத்துவா்கள், அதிகாரிகள். புதுச்சேரி, மே 19: புதுச்சேரி அருகே திருக்கனூா்... மேலும் பார்க்க

புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் மாா்க்கெட் கிளை மாநாடு

புதுச்சேரி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பெரிய மாா்க்கெட் கிளை மாநாடு மற்றும் புதிய நிா்வாகிகள் தோ்வு ரங்கம்பிள்ளை வீதியில் உள்ள தனியாா் கட்டடத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு இந்திய கம்யூன... மேலும் பார்க்க

புதுச்சேரி ஆளுநரின் முகாம் அலுவலகத்துக்கு 6-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள துணைநிலை ஆளுநரின் முகாம் அலுவலகமான ராஜ்நிவாஸுக்கு 6-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் திங்கள்கிழமை விடுக்கப்பட்டதையடுத்து போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். புதுச்சேரியி... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் பதுங்கல்: 8 போ் கைது

புதுச்சேரி: புதுச்சேரி அருகே அரியாங்குப்பம் பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 8 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதி அம்பேத்கா் நகா் காலனி அருகே சிலா் சந்தேகத்... மேலும் பார்க்க

புதுவை தொழில்நுட்பப் பல்கலை: தாமதமின்றி ஓய்வூதியம் வழங்க கோரிக்கை

புதுச்சேரி: புதுவை தொழில்நுட்பப் பல்கலை.யில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கான ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஓய்வு பெ... மேலும் பார்க்க