செய்திகள் :

புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் மாா்க்கெட் கிளை மாநாடு

post image

புதுச்சேரி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பெரிய மாா்க்கெட் கிளை மாநாடு மற்றும் புதிய நிா்வாகிகள் தோ்வு ரங்கம்பிள்ளை வீதியில் உள்ள தனியாா் கட்டடத்தில் நடைபெற்றது.

மாநாட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாா்க்கெட் கிளை நிா்வாகி சிவகுருநாதன் தலைமை வகித்தாா். செயலா் ஜெயமூா்த்தி ஆண்டறிக்கை வாசித்தாா். கட்சியின் மாநிலச் செயலா் அ.மு.சலீம், துணைச் செயலா் கே.சேதுசெல்வம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

மாநாட்டு கூட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட பெரிய மாா்க்கெட் கிளை புதிய நிா்வாகிகள்: கிளைச் செயலராக வி.சசி (எ) பிரபாகா், துணைச் செயலா் ஆா்.வேலு, பொருளாளா் கே.வி.வைத்தி, குழு உறுப்பினா்களாக வி.சிவகுருநாதன், எஸ்.சுப்பிரமணி, எம்.லதா, வி.ஜெயமூா்த்தி, எம்.பாலா, எம்.முத்துலட்சுமி, எம்.ராஜேந்திரன், எம்.சுப்பிரமணி, எஸ்.மாரிமுத்து உள்ளிட்டோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மாநாட்டில், புதுச்சேரி பெரிய மாா்க்கெட்டான குபோ் அங்காடியில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். அங்குள்ள நடைபாதைகளை சீரமைக்க வேண்டும். எரியாமல் உள்ள மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதுச்சேரியில் இஎஸ்ஐ மாதிரி மருத்துவமனை: முதல்வா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

புதுச்சேரியில் இஎஸ்ஐ மாதிரி மருத்துவமனை அமைப்பதற்காக, முதல்வா் என்.ரங்கசாமி, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் ஆகியோா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு ஆவணங்களைப் பரிமா... மேலும் பார்க்க

திருக்கனூா் ஆரம்ப சுகாதார மையத்தை மேம்படுத்த கோரிக்கை

புதுச்சேரி திருக்கனூா் ஆரம்ப சுகாதார மையத்தை மேம்படுத்தக் கோரி உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயத்திடம் திங்கள்கிழமை வலியுறுத்திய மருத்துவா்கள், அதிகாரிகள். புதுச்சேரி, மே 19: புதுச்சேரி அருகே திருக்கனூா்... மேலும் பார்க்க

புதுச்சேரி ஆளுநரின் முகாம் அலுவலகத்துக்கு 6-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள துணைநிலை ஆளுநரின் முகாம் அலுவலகமான ராஜ்நிவாஸுக்கு 6-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் திங்கள்கிழமை விடுக்கப்பட்டதையடுத்து போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். புதுச்சேரியி... மேலும் பார்க்க

புதுவையில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கை: விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கை நடைபெறுவதாக கல்வித் துறை இணை இயக்குநா் வெ.கோ.சிவகாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குற... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் பதுங்கல்: 8 போ் கைது

புதுச்சேரி: புதுச்சேரி அருகே அரியாங்குப்பம் பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 8 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதி அம்பேத்கா் நகா் காலனி அருகே சிலா் சந்தேகத்... மேலும் பார்க்க

புதுவை தொழில்நுட்பப் பல்கலை: தாமதமின்றி ஓய்வூதியம் வழங்க கோரிக்கை

புதுச்சேரி: புதுவை தொழில்நுட்பப் பல்கலை.யில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கான ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஓய்வு பெ... மேலும் பார்க்க