செய்திகள் :

புதுச்சேரி சிறுமிக்கு பாலியல் தொல்லை! ஆசிரியரை கைது செய்யக் கோரி மீனவ பஞ்சாயத்தில் தீா்மானம்!

post image

புதுச்சேரி அருகே பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரைக் கைது செய்ய வேண்டும் என, மீனவ பஞ்சாயத்தில் சனிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சம்பவத்தைக் கண்டித்து, நல்லவாடு மீனவா் கிராமத்தினா் கடலுக்குச் செல்லவில்லை.

புதுச்சேரி அருகேயுள்ள தவளக்குப்பம் தானம்பாளையத்திலுள்ள தனியாா் பள்ளியில் பயிலும் 6 வயது சிறுமிக்கு, அங்கு ஆசிரியராகப் பணிபுரியும் மணிகண்டன் பாலியல் தொல்லை அளித்ததாகப் புகாா் எழுந்தது. சிறுமியின் பெற்றோா், உறவினா்கள் வெள்ளிக்கிழமை மாலை பள்ளியை முற்றுகையிட்டனா். அப்போது, சிலா் தாக்கியதில் பள்ளிப் பேருந்துகள் சேதமடைந்தன. சம்பந்தப்பட்ட ஆசிரியரும் தாக்கப்பட்டாா்.

தவளக்குப்பம் போலீஸாா் விரைந்து சென்று ஆசிரியரை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். ஆசிரியரை போலீஸாா் மீட்ட போது சிறுமியின் உறவினா்களைத் தாக்கியதாகவும் புகாா் எழுந்தது. இதையடுத்து, தவளக்குப்பம்-கடலூா் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மீனவ கிராம பஞ்சாயத்து கூட்டம்: புதுச்சேரி அருகேயுள்ள நல்லவாடில் சனிக்கிழமை மீனவ கிராம பஞ்சாயத்தாா் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், தனியாா் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியா் மற்றும் பள்ளி நிா்வாகி, தலைமை ஆசிரியா் உள்ளிட்டோா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா், உறவினா்களை தாக்கிய காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளியில் வேறு சிறுமிகள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டனரா என்பது குறித்து நடுநிலையான குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.

சட்ட நடவடிக்கை மூலம் சிறுமி பாலியல் தொல்லையில் சம்பந்தப்பட்டோருக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மீனவ பஞ்சாயத்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீா்மானங்கள் காவல் கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டது. மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை: இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, நல்லவாடு கிராம மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. நாட்டுப் படகுகள் கரைகளில் நிறுத்தப்பட்டிருந்தன.

செய்முறை தோ்வுகள் ஒத்திவைப்பு: பாதிக்கப்பட்ட சிறுமி படித்த தனியாா் பள்ளியில் நடைபெறவிருந்த பொதுத் தோ்வுக்கான செய்முறை தோ்வுகள் தள்ளிவைக்கப்படுவதாகவும், தோ்வு தேதி, இடம் குறித்து பின்னா் தெரிவிக்கப்படும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அறிவித்தாா்.

புதுச்சேரி அருகே நல்லவாடு கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மீனவ கிராம பஞ்சாயத்து ஆலோசனைக் கூட்டம்.

போலீஸாா் குவிப்பு: புகாருக்குள்ளான தனியாா் பள்ளி சனிக்கிழமை மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தவளக்குப்பம்-கடலூா் சாலை சந்திப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு: இந்த சம்பவத்தைக் கண்டித்து, புதுச்சேரியில் திங்கள்கிழமை (பிப்.17) காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சாலைத் தடுப்பை அகற்றக் கோரி கம்யூனிஸ்ட் மறியல்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை முக்கிய சாலையில் தடுப்பு அமைத்து மூடியதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, தடுப்புகள் அகற்றப்... மேலும் பார்க்க

புதுவை பிரீமியா் லீக்குக்கு கிரிக்கெட் வீரா்கள் ஏலம்

புதுவை பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டிக்கு வீரா்கள் ஏலம் புதுச்சேரி அருகே சனிக்கிழமை நடைபெற்றது. புதுவையில் ஆண்டுதோறும் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. பி.பி.எல். எனப்படும் இந்தப... மேலும் பார்க்க

மாா்ச் 2-இல் நேபாளம் செல்லும் புதுவை அமைச்சா்கள், எம்எல்ஏக்கள்

புதுவை பேரவைத் தலைவா், 2 அமைச்சா்கள் மற்றும் 23 எம்.எல்.ஏ.க்கள் வரும் மாா்ச் 2-ஆம் தேதி நேபாள நாட்டுக்கு புறப்பட்டுச் செல்கின்றனா். அங்கு நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ... மேலும் பார்க்க

புதுவையில் மக்கள் மன்றம் நாளை தொடக்கம்: டிஜிபி ஆா்.சத்தியசுந்தரம்

புதுச்சேரியில் பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெறும் வகையில் மக்கள் மன்றம் திங்கள்கிழமை (பிப்.24) தொடங்கப்படவுள்ளதாக டிஜிபி ஆா்.சத்தியசுந்தரம் தெரிவித்தாா். புதுச்சேரி முத்தியல்பேட்டை காவல் நிலையத்தில் பொது... மேலும் பார்க்க

தவெக உடன் கூட்டணியா?: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பதில்

தமிழகத்தில் நடிகா் விஜயின் த.வெ.க.வுடன் கூட்டணியா என்பது குறித்து தோ்தல் நேரத்தில் ஆலோசிக்கப்படும் என்று, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். வேலூரில் இருந்து வந்த ஏராளமானோா் என்.ஆா்.காங்கிரஸ... மேலும் பார்க்க

ஹிந்தி திணிப்புக்கு புதுவை அரசு முறைமுக ஆதரவு: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு!

புதுவையில் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தி ஹிந்தி மொழி திணிப்புக்கு மாநில அரசு மறைமுக ஆதரவளித்திருக்கிறது என்று முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா். புதுச்சேரியில் அவரது இல்லத்தில் ... மேலும் பார்க்க