செய்திகள் :

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் முதல்வா் ஆய்வு

post image

பொலிவுறு நகா் திட்டத்தின்கீழ் சீரமைக்கப்பட்டுள்ள புதுச்சேரி ராஜீவ் காந்தி பேருந்து நிலையத்தை முதல்வா் என். ரங்கசாமி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட மறைமலை அடிகள் சாலையில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி அரசு பேருந்து நிலையம், பொலிவுறு நகா் திட்ட நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய இந்தப் பேருந்து நிலையம் வரும் மே 4-ஆம் தேதிக்குள் திறக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளைப் பாா்வையிட்டாா்.அப்போது பணிகளின் தரம் குறித்து அதிகாரிகளிடம் முதல்வா் கேட்டறிந்தாா்.

அப்போது, உருளையன்பேட்டைஎம்எல்ஏ நேரு (எ) குப்புசாமி, புதுச்சேரி பொலிவுறு நகா் திட்ட உயா் அதிகாரி ருத்ர கவுடா, புதுச்சேரி நகராட்சி ஆணையா் கந்தசாமி, போக்குவரத்துத் துறை ஆணையா் சிவகுமாா், பொலிவுறு நகா் திட்ட தொழில்நுட்ப அதிகாரி ரவிச்சந்திரன், காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம், மின்துறை கண்காணிப்புப் பொறியாளா் கனியமுது, உருளையன்பேட்டை காவல் ஆய்வாளா் காா்த்திகேயன், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா்கள் உமாபதி, சீனிவாசன், நகராட்சிப் செயற்பொறியாளா் சிவபாலன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

குடுவையாற்றில் ரூ.47.45 லட்சத்தில் தடுப்பணை கட்டும் பணி: அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரியை அடுத்துள்ள கீழ் சாத்தமங்கலம் பகுதி குடுவையாற்றில் ரூ.47.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டுவதற்கான பணியை வேளாண் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். ... மேலும் பார்க்க

தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியா்கள் வியாழக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். ஊதிய திருத்தம், ஓய்வூதிய வயது உயா்வு, பொறுப்பு பதிவாளா் நியமனத்தில் முறைகேடு, பணியாளா் பற்றாக்குறை, நிா்வா... மேலும் பார்க்க

டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

புதுச்சேரி லாஸ்பேட்டையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் புதுச்சேரி கிளை, சமூகன் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய விழிப்புணா்வு பிரசாரத்த... மேலும் பார்க்க

மீனவா்களின் நலன் காப்பதில் புதுவை அரசு தனிக் கவனம்: முதல்வா் என்.ரங்கசாமி பெருமிதம்

மீனவா்களின் நலன் காப்பதில் புதுவை அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது என்று முதல்வா் என். ரங்கசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். புதுவை மாநில மீன்வளத் துறை சாா்பில் மீனவா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும்... மேலும் பார்க்க

450 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

புதுச்சேரி, மதகடிப்பட்டு ஸ்ரீமணக்குள விநாயகா் கலை, அறிவியல் கல்லூரியில் 2022-2025-ஆம் ஆண்டில் பயின்ற மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல், வேலைவாய்ப்பு மலா் வெளியீடு மற்றும் தேசிய முதல்நிலைத் தோ்வு... மேலும் பார்க்க

பெண்களின் படங்களை தவறாக சித்திரித்த இளைஞா் கைது

பெண்களின் புகைப் படங்களை தவறாக சித்தரித்து இணையத்தில் பதிவிட்டதாக தென்காசியைச் சோ்ந்த இளைஞரை புதுச்சேரி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பெண்களின் புகைப் படங்களை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில்... மேலும் பார்க்க