செய்திகள் :

புதுச்சேரி: `10,000 மாணவர்கள் பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டனர்!' - அதிர்ச்சி கொடுக்கும் மத்திய அரசு

post image

முழு வீச்சில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்திய புதுச்சேரி கல்வித்துறை

புதுச்சேரியில் கடந்த 2021-ல் பா.ஜ.க - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் அனைத்தும் அவசர அவசரமாக சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.

ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் குறித்த பயிற்சியை கொடுக்காமல் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையால், மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும் என்று கல்வியாளர்களும், பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

ஆனால் அதனை கண்டுகொள்ளாத புதுச்சேரி அரசு, முழு வீச்சில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி முடித்தது. இந்த நிலையில்தான் புதுச்சேரியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10,054 மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியிருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் தொடர்பாக முதல்வர் ரங்கசாமிக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதிய கடிதத்தில், `பள்ளிக் கல்வித்துறையின் மூன்று முக்கிய முயற்சிகள் குறித்து தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

பள்ளி மாணவர்களுக்கு டைப் - 2 நீரிழிவு நோய்

நமது சுற்றுச்சூழலை வலுப்படுத்தவும், மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும்  நல்வாழ்வை ஊக்குவிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் அரசால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தேசிய கல்விக் கொள்கையின்படி 2030-ம் ஆண்டுக்குள் இடைநிற்றல் இல்லாத 100% சதவிகித மாணவர் சேர்க்கை திட்டமிடப்பட்டு, பள்ளிப்படிப்பை நிறுத்திய குழந்தைகளை மீண்டும் கல்வி நிலையங்களுக்கு கொண்டுவர வேண்டும் என்பது இலக்கு.

ஆனால் 2023-24-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி உங்கள் புதுச்சேரி மாநிலத்தில், 10,054 ஆயிரம் குழந்தைகள் பள்ளிப் படிப்பை நிறுத்தியதாக பதிவாகியிருக்கிறது.

மாணவர்கள் | கோப்புப் படம்

அதனால் அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கு உங்கள் தலையீட்டில் தீவிரமான நடவடிக்கைகள் வேண்டும். மேலும் பள்ளி மாணவர்களிடையே டைப்-2 நீரிழிவு நோய் அதிகரித்து வருவதும் கவலை அளிக்கின்றன.

அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுவதன் காரணமாக, ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் மாணவர்களிடம் குறைந்துவிட்டது.

பள்ளிகளில் நீரிழிவுப் பலகை அவசியம்

அதனால் பதப்படுத்தப்பட்ட உணவுகளை மாணவர்கள் சாப்பிடுவதை தடுத்து, அவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்வது அவசியம் என்று நம்புகிறேன்.

சி.பி.எஸ்.இ கல்வி வாரியத்தின் பள்ளிகளிலும் 2025-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதிக்குள் நீரிழிவு பலகையை வைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதில் பரிந்துரைக்கப்பட்ட சர்க்கரை அளவு, ஆரோக்கியமற்ற உணவுகளில் உள்ள சர்க்கரையின் அளவு இருக்க வேண்டும்.

முதல்வர் ரங்கசாமி

அத்துடன் சத்தற்ற உணவு (Junk food), குளிர் பானங்கள் உள்ளிட்ட அதிக சர்க்கரை உள்ள பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்த தகவல்களை குறிப்பிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதை புதுச்சேரி அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல்; "விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத கோழைகளைக் கைது செய்க" - கமல்

கடந்த ஜூலை 28ம் தேதி மக்களவையில் பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்த விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன், "இந்தத் தாக்குதல் நடந்தபோது சவுதி அரேபியாவிலே இரு... மேலும் பார்க்க

'அண்ணா வழியில் 'ஆப்' மூலம் மக்களை சந்திக்கப்போகிறோம்!' - தவெக-வின் பலே ஐடியா!

My TVKதமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான 'My TVK' என்கிற ஆப்பை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்வு பனையூர் அலுவலகத்தில் நடந்திருந்தது. நிகழ்வில் நிர்வாகிகள் மத்தி... மேலும் பார்க்க

சந்திக்க மறுத்த மோடி! - ஆதங்க ஓபிஎஸ்-ன் அடுத்த நகர்வு என்ன?

மதுரை - போடிநாயக்கனூர் ரயில் பாதையின் மின்மயமாக்கல் உள்ளிட்ட திட்டங்களைத் தொடங்கி வைக்க தூத்துக்குடிக்கு வருகை தந்த பிரதமருக்கு, ஓ.பி.எஸ் வரவேற்பு அளிக்க விரும்பி கடிதம் எழுதியிருந்தார். "தூத்துக்குடி... மேலும் பார்க்க

`இந்தியாவின் மீது 20 - 25 சதவிகித பரஸ்பர வரியா?' - ட்ரம்பின் பதில் என்ன?

ஏப்ரல் 9-ம் தேதி அமலுக்கு வரவிருந்த அமெரிக்காவின் பரஸ்பர வரியை, 'ஒப்பந்தம் பேசலாம்' என்று 90 நாள்களுக்கு ஒத்தி வைத்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்தப் பரஸ்பர வரி வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அம... மேலும் பார்க்க

Pahalgam: இந்திய பணம் டு பாகிஸ்தான் சாக்லேட்; தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டவை - வெளியான லிஸ்ட்

ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் நேற்று ஜம்மு காஷ்மீரில் ஆபரேஷன் மகாதேவ் என்ற நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய உள்து... மேலும் பார்க்க