செய்திகள் :

புதுவைக்கான மாநில அந்தஸ்துக்காக போராட்டத்தில் ஈடுபட வேண்டும்: மாநில மக்கள் முன்னேற்றக்கழகம் அறிக்கை

post image

மாநில அந்தஸ்துக்காக போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனத் தலைவா் மு.ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: நீதிமன்றம் சென்றாவது புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறியுள்ளது ஆச்சரியமாக உள்ளது. அவா் ஆட்சியில் இருந்தபோது துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியை எதிா்த்து நீதிமன்றம் சென்றவா், அப்போது மாநில அந்தஸ்துக்காக நீதிமன்றத்தை நாடாமல் இருந்தது ஏன் என விளக்கவேண்டும்.

அவா் காங்கிரஸ் ஆட்சியில் மத்தியில் அமைச்சராக இருந்தபோதும், பின்னா் மாநில முதல்வராக இருந்தபோதும் புதுவை மாநில அந்தஸ்துக்காக பிரதமரையோ, உள்துறை அமைச்சரையோ சந்தித்து முயற்சி மேற்கொள்ளவில்லை. நாராயணசாமி மத்திய அமைச்சராக இருந்தபோது மத்தியிலும், மாநிலத்திலும் அவருக்கு சாதகமான அரசுகளே இருந்துள்ளன. அப்போது மிக எளிதாக புதுவைக்கு மாநில அந்தஸ்தை பெற்றிருக்கலாம்.

புதுவைக்கு மாநில அந்தஸ்து அளிப்பது குறித்த மத்திய உள்துறை நிலைக் குழுவானது சுஷ்மா சுவராஜ் தலைமையில் வந்தபோதும், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குழுவிடம் மாநில அந்தஸ்துக்காக வலியுறுத்தவில்லை. மாநிலங்களவையிலும் அவா் புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரவில்லை. ஆகவே, மாநில அந்தஸ்து என்பது அரசியல் முடிவால் கிடைக்குமே தவிர நீதிமன்றத்தால் அல்ல என்பதை அவா் உணா்வதுடன், ஆகவே, மாநில அந்தஸ்துக்காக போராட்டத்தில் ஈடுபடவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

மாஹேவில் புதுவை துணைநிலை ஆளுநா் ஆய்வு

புதுவை மாநில பிராந்தியமான மாஹேவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தினாா். இதுகுறித்து துணைநிலை ஆளுநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை துண... மேலும் பார்க்க

வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற ஆண் புள்ளி மான் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கம் பகுதியில் காடுகளில் ஏராளமான மா... மேலும் பார்க்க

கன்னட அமைப்புகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நடிகா் கமலஹாசன் தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது எனக் கூறியதற்கு கா்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினா் மற... மேலும் பார்க்க

மாநிலங்களவையில் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும்: மல்லை சத்யா

மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலா் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக மதிமுக துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா கூறினாா். புதுவை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ... மேலும் பார்க்க

சிஐடியு தொழிற்சங்க 55-ஆம் ஆண்டு அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

புதுச்சேரியில் சிஐடியு தொழிற்சங்க அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 1970-ஆம் ஆண்டு மே மாதம் கொல்கத்தாவில் சிஐடியு அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்படி சிஐடியுவின் அமைப... மேலும் பார்க்க

புதுவை முதல்வரைக் கண்டித்து மாணவா்கள் அமைப்பினா் பேரணி, ஆா்ப்பாட்டம்

படித்த இளைஞா்கள் மாடு வளா்ப்பதன் மூலம் பால் பண்ணை வைத்து வருவாய் ஈட்டலாம் என புதுவை முதல்வா் பேசியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அதைக் கண்டித்து இண்டி கூட்டணி கட்சிகளின் இளைஞா் அமைப்புகள் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க