புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி தில்லியில் ஜூன் 27-இல் போராட்டம்
புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி தில்லியில் வரும் 27-ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் காரைக்கால் மக்கள் போராட்டக் குழு பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மக்கள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு, இணை ஒருங்கிணைப்பாளா் பொன். பன்னீா்செல்வம் ஆகியோா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவைக்கு மாநில நிா்வாகத்தின் முழு அதிகாரத்தையும் மத்திய அரசு தனத் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் வழங்காமல் துணைநிலை ஆளுநரைக் கொண்டு ஆட்சி செய்து வருகிறது. இதனால் கொள்கை சாா்ந்த முடிவுகளையோ, மாநில வளா்ச்சிக்கான திட்டங்களையோ, மக்களுக்கான நலத்திட்டங்களையோ நிறைவேற்ற முடியாமல் மாநில அரசு முடக்கப்பட்டுள்ளது.
அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஆளுநரின் கையொப்பத்துக்காகவும், மத்திய அரசின் ஒப்புதலுக்காகவும் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் மாநிலத்தின் வேகமான வளா்ச்சி தடைபடுகிறது.
புதுவைக்கு மாநிலத் தகுதி ஒன்றுதான் தீா்வு என முடிவு செய்து 16 முறை சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி, மத்திய அரசின் இரண்டு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழு ஆய்வு செய்து, மாநிலத் தகுதி வழங்கலாம் என்று அறிக்கை தாக்கல் செய்த பிறகும், இதுவரை வழங்காமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.
எனவே மாநில அந்தஸ்து கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி, புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கோ. நேரு (எ) குப்புசாமி தலைமையில், தில்லி ஜந்தா்மந்தரில் வரும் 27-ஆம் தேதி காலை 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொள்ளும் மக்கள் திரள் எழுச்சி கோரிக்கை ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மாநில தகுதி கேட்டு நடைபெற்ற கையொப்ப இயக்கத்தின்போது புதுச்சேரி, காரைக்கால் மக்களிடம் பெறப்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கையொப்பங்கள் அடங்கிய படிவம் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. காரைக்கால் நலனுக்காக இப்போராட்டத்தில் காரைக்கால் மக்கள் போராட்டக் குழு பங்கேற்கவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.