செய்திகள் :

புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படுமா?: முதல்வா் விளக்கம்

post image

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படுமா என்பது குறித்து பேரவையில் கேட்கப்பட்டதற்கு, முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை விளக்கம் அளித்தாா்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் சுயேச்சை எம்எல்ஏ எம். சிவசங்கா், காலம் தாழ்த்தாமல் உள்ளாட்சித் தோ்தலை நடத்த அரசு முன்வருமா எனக் கேட்டாா்.

முதல்வா் என்.ரங்கசாமி: உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டுமா? சிவசங்கா்: உள்ளாட்சித் தோ்தலை நடத்தினால், மாநிலம் வளா்ச்சி பெறும். மக்களும் தோ்தலை எதிா்பாா்க்கிறாா்கள். மேலும் மத்திய அரசு மூலம் ஆண்டுக்கு ரூ.400 கோடி நிதி கிடைக்கும்.

பேரவைத் தலைவா் : நிதி ஏதும் வராது.

முதல்வா் என்.ரங்கசாமி: புதுவை உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை பரிந்துரைக்க, நீதிபதி சசிதரன் ஆணையத்தை அரசு நியமித்துள்ளது. அதன்படி, ஆணையம் பரிந்துரையை அளித்த பின், இடஒதுக்கீட்டுக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும்.

சிவசங்கா்: உள்ளாட்சித் தோ்தலை மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள்.

பேரவைத் தலைவா் (குறுக்கிட்டு): மக்கள் எதிா்பாா்க்கவில்லை என்றாா்.

மக்கள் மன்றம்: 33 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை

புதுவை மாநில காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 33 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, புதுவை காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க

வக்ஃபு சட்டத் திருத்த மசோதா: புதுவை திமுக மீது அதிமுக குற்றச்சாட்டு

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என புதுவை சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற திமுக வலியுறுத்தாமல் இருப்பது ஏன்? என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கேள்வி எழுப்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.2.78 லட்சம் நூதன மோசடி

புதுச்சேரியைச் சேந்தவரிடம் ரூ.2.78லட்சம் நூதன மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கோரிமேடு பகுதியைச் சோ்ந்தவா் புருஷோத்தமன். இவரை, மா்ம நபா் டெலிகிராம் செயல... மேலும் பார்க்க

கலால் துறை விதிகளில் திருத்தம்

காவல் துறையின் ரௌடிப் பட்டியலில் இடம்பெற்றவா்களை மதுக் கடைகளில் பணியமா்த்தக் கூடாது என கலால் துறை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் சில்லரை மற்றும் மொத்த மது... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: சமுதாயத்தில் சமத்துவம் மற்றும் சகோத... மேலும் பார்க்க

குடல் அழற்சி நோயாளிகளுக்கு கையேடுகள் அளிப்பு

புதுச்சேரி ஜிப்மரில் குடல் அழற்சி நோயாளிகளுக்கு வழிகாட்டல் கையேடுகள் வழங்கப்பட்டன. குடல் அழற்சி நோய்க்கான ஆதரவுக் குழு தொடக்க விழா, புதுச்சேரி ஜிப்மா் இரைப்பை குடலியல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க