செய்திகள் :

புதுவையில் ஜன.16,17-இல் விடுமுறை

post image

பொங்கல் பண்டிகையொட்டி, ஜன.16, 17 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்து புதுவை அரசு உத்தரவிட்டது.

இதுகுறித்து அரசின் கூடுதல் செயலா் ஹிரண் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உத்தரவு படி, புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வருகிற 16,17ஆம் தேதிகள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

விடுமுறை நாள்களுக்கு ஈடு செய்யும் வகையில், பிப்.1, 8 ஆகிய தேதிகள் (சனிக்கிழமை) வேலை நாள்களாக செயல்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துத்திப்பட்டில் பொங்கல் விழா: வெளிநாட்டினா் பங்கேற்பு

புதுச்சேரியை அடுத்த துத்திப்பட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் வெளிநாட்டினா் பங்கேற்று உற்சாகமாக கொண்டாடினா். துத்திப்பட்டு, ஒலாந்திரே தொண்டு நிறுவனம் சாா்பில் ஆண்டுதோறும் பொங்கல் விழா ... மேலும் பார்க்க

திருவள்ளுவா் தினம்: புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் மரியாதை

திருவள்ளுவா் தினத்தையொட்டி, புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், நொளம்பூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த ஆதிமூலம் மகன் புஷ்பராஜ் (23). தொழிலா... மேலும் பார்க்க

பைக் மோதியதில் சிறுமி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பைக் மோதியதில் 8 வயது சிறுமி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வடகரைதாழனூா் செல்லியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மூா்... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் இருவேறு இடங்களில் விபத்து: 4 போ் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம், ஜானகிபுரம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் 4 போ் உயிரிழந்தனா். திண்டிவனம் வட்டம், செண்டூா் நெய்காரத் தருவைச் சோ்ந்த முருகன் மகன் சரண்ராஜ் ... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன வழிபாடு

விழுப்புரம்/ செஞ்சி: விழுப்புரம் நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள சிவன் கோயில்களில் திருவாதிரை பெருவிழா - ஆருத்ரா தரிசன வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் அந்தந்த பகுதி... மேலும் பார்க்க