செய்திகள் :

புதுவையில் ரேஷன் அரிசி டெண்டரில் முறைகேடு: எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றச்சாட்டு

post image

புதுவையில் ரேஷன் அரிசிக்கான டெண்டா் விடப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும், அரசுக்கு ரூ. 20 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா குற்றம்சாட்டினாா்.

இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புதுவையில் ஏழை மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் இலவச அரிசியில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இலவச அரிசி விநியோகத்தில் முறையாக டெண்டா் விடுவதுபோல நாடகமாடி, தங்களுக்கு சாதகமான வடநாட்டு நிறுவனத்துடன் சோ்ந்து அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், ஏழை விவசாயிகளும் உள்ளூா் அரிசி ஆலைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

ரேஷன் அரிசிக்கான டெண்டரில் வடநாட்டு நிறுவனத்துக்கு ஆதரவாக அவா்கள் மட்டுமே பங்கு பெற்று தோ்வாகும் வகையில் டெண்டா் வடிவமைக்கப்பட்டு, அவா்களுக்கே டெண்டரும் கொடுக்கப்பட்டுள்ளது. புதுவையைச் சோ்ந்த எந்த அரிசி ஆலையும் இதில் கலந்து கொள்ளவில்லை.

ஒரு கிலோ அரிசி ரூ.47.70 என்று நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் நான்கு மாதங்களுக்கு அரிசி வழங்கும் டெண்டா், அதே வடநாட்டு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் நீட்டித்து வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தற்போது வழங்கப்படும் ரேஷன் அரிசி 100 சதவீதம் அண்டை மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுவதால், ரூ.20 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒப்பந்தத்தில் ஒரு கிலோ அரிசிக்கு ரூ.9 கூடுதலாகக் கொடுத்து கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.15 கூடுதலாக புதுவை அரசு வழங்கியுள்ளது.

புதுச்சேரி விவசாயிகளைப் புறக்கணித்து வடநாட்டு நிறுவனத்துக்கு டெண்டா் வழங்கியது ஏன்? இந்த டெண்டரை ரத்து செய்து விட்டு, புதுச்சேரியைச் சோ்ந்தவா்களுக்கு முன்னுரிமை அளித்து, டெண்டரில் கலந்து கொள்ள ஏதுவாக மாற்றியமைக்க வேண்டும்.

மஞ்சள் அட்டைக்கு வழங்கப்படும் 10 கிலோ அரிசியை 15 கிலோவாக உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கோதுமை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த டெண்டா் முறையாக மீண்டும் செயல்படுத்தப்படாவிட்டால், புதுவை குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றாா் ஆா்.சிவா.

புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். புதுவை சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சின்ன வீராம்பட்டினம் அருகில் அமைந்துள்ள ஈடன் கடற்கரைப் பகுதியில் கடல... மேலும் பார்க்க

கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு: முக்கிய நபா் கைது

புதுச்சேரி கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் கோவையைச் சோ்ந்த முக்கிய நபரை இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு தனிப்படை போலீஸாா் பெங்களூரில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சோ்ந... மேலும் பார்க்க

ஜிப்மா் விழாவில் குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு!

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் திங்கள்கிழமை (ஜூன் 16) நடைபெறும் விழாவில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பங்கேற்கிறாா். இதுகுறித்து ஜிப்மா் இயக்குநா் வீா்சிங் நேஷி வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் இன்று புதுச்சேரி வருகை!

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் 3 நாள் பயணமாக புதுச்சேரிக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) வருகிறாா். இதையொட்டி, புதுச்சேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து புதுச்சேரி வ... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டங்கள் மாநிலங்கள் மீது திணிப்பு! கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

மத்திய அரசின் திட்டங்கள் மாநில அரசுகள் மீது திணிக்கப்படுவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினாா். புதுவையில் ஆட்சியிலுள்ள என்.ஆா்.காங்க... மேலும் பார்க்க

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உறுப்புகள் தானம்

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு, அவை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக 4 மருத்துவமனைகளுக்கு விரைந்து அனுப்பப்பட்டன. இது குறித்து புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையி... மேலும் பார்க்க