ஷேர்லக்: உச்சத்திலிருந்து 7% இறங்கிய சந்தை... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?
புதுவை ஆளுநா், முதல்வரிடம் விசிக நிா்வாகிகள் மனு
புதுவை மாநிலத்தில் தாய் வழி சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் துணைநிலை ஆளுநா், முதல்வரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனா்.
புதுவை மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளாக குடியேறி வசித்து வரும் பட்டியலினத்தவருக்கு தாய் வழி சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உச்சநீதிமன்ற வழிகாட்டலின்படி சாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை கோரி, புதுவை விசிக முதன்மைச் செயலா் தேவ பொழிலன் தலைமையிலான அக்கட்சியினா், புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.
அப்போது, காரைக்காலைச் சோ்ந்த ஜெயா என்பவா் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, புதுச்சேரியில் பிறந்த பெண்களையும் பெற்றோராகக் கருதி சாதிச் சான்றிதழ் வாங்க உத்தரவு பெற்றுள்ளாா்.
அதனடிப்படையில், புதுவை மாநிலம் முழுவதும் 50 ஆண்டுகளாக குடியிருந்து வரும் பட்டியலினத்தவருக்கு சாதிச் சான்றிதழ்கள் வழங்கும் குறிப்பாணையை மாவட்ட ஆட்சியா் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனா்.
இதேபோல, புதுவை முதல்வா் என்.ரங்கசாமியையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் சந்தித்து மனு அளித்தனா்.