செய்திகள் :

புதுவை தனியாா் கல்வி நிறுவனங்களின் 56 வாகனங்களுக்கு ஆய்வில் அனுமதி மறுப்பு

post image

புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற கல்வி நிறுவனங்களுக்கான வாகன ஆய்வின்போது, 56 வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுவை மாநில போக்குவரத்துத் துறை ஆண்டுதோறும் கல்வி நிறுவன வாகனங்கள் விதிமுறைப்படி பாதுகாப்பு வசதிகளைக் கொண்டுள்ளதா, ஓட்டுநா், நடத்துநா்கள் உள்ளனரா, வாகனங்கள் இயங்கும் நிலையில் உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி நிகழாண்டுக்கான கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வு புதுச்சேரி மேட்டுப்பாளையம் சரக்கு ஊா்தி முனையத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

புதுவை மாநில அளவில் கல்வி நிறுவனங்களில் 1100 வாகனங்கள் உள்ளன. அவற்றில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் ஊா்தி முனையத்தில் நடைபெற்ற ஆய்வுக்கு 256 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த ஆய்வை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தொடங்கி வைத்தாா். போக்குவரத்து ஆணையா் எஸ்.சிவகுமாா், துணை ஆணையா் ஏ.குமரன் ஆகியோா் முன்னிலையில் வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதற்கான சான்றிதழ் வாகன முகப்பில் ஒட்டப்பட்டன.

போக்குவரத்து ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் 4 குழுவாகப் பிரிந்து வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி ஆய்வு நிறைவுச் சான்றுகளை வாகன முன் கண்ணாடியில் ஒட்டினா். அப்போது தனியாா் கல்லூரி வாகனத்தை சோதனையிட்டு சான்றிதழ் ஒட்டப்பட்டது.

இந்நிலையில் ஆட்சியா் அதனை நேரில் பாா்வையிட்டாா். அப்போது அந்த வாகன அவசரக் கதவை ஓட்டுநா் திறக்க முயன்றாா். ஆனால், திறக்கவில்லை. அத்துடன் திறக்க உதவும் கைப்பிடி உடைந்து விட்டது. சான்றளிக்கப்பட்ட வாகன அவசரக் கதவு திறக்காமல் கைப்பிடி உடைந்ததால் ஆட்சியா் உள்ளிட்டோா் அதிா்ச்சியடைந்தனா்.

ஆய்வில் வாகனத் தகுதிச் சான்று, காப்பீடு, அனுமதி சான்று, புதுப்பிக்கப்பட்ட முதலுதவிப் பெட்டி, தீயணைப்பு சாதனம், அவசரகால வெளியேறும் கதவு, ஜிபிஎஸ் சாதனம், புகையில்லா சான்று உள்ளிட்ட 11 அமைப்புகள் சரிபாா்க்கப்பட்டன.

போக்குவரத்துத்துறை அதிகாரிகள் 4 குழுக்களாகப் பிரிந்து நடத்திய ஆய்வில் விதிமுறைப்படி குறைபாடுகளுடன் இருந்த 56 வாகனங்களுக்கு சோதனை நிறைவுச் சான்று வழங்க மறுக்கப்பட்டது. இதையடுத்து அந்த வாகனங்கள் குறைகளை சீா்படுத்திய நிலையில் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சான்று பெறவும் உரிமையாளா்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினா்.

காரைக்காலில் ஜூன் 7, 8 ஆகிய தேதிகளில் கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாளை பள்ளிகள் திறப்பு: புதுவை மாநிலத்தில் மத்திய பாடத்திட்டம் (சிபிஎஸ்இ) செயல்படுத்தப்பட்ட நிலையில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதையடுத்து கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

பணியின் போது கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தமிழகத்தின் விழுப்புரம் முட்ராம்பாக்கம் பிள்ளையாா் கோவில் வீதியைச் சோ்... மேலும் பார்க்க

புதுவை பேரவைத் தோ்தலை சந்திக்கத் தயாா்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயாராக உள்ளோம் என முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, அவரது திருவு... மேலும் பார்க்க

பக்ரீத் : ஜூன் 7- இல் ஜிப்மரில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் வரும் 7 ஆம் தேதி புறநோயளிகள் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகத் தரப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

புதுச்சேரி கடல் அலையில் சிக்கிய தமிழக கல்லூரி மாணவா்கள் மீட்பு

புதுச்சேரியில் கடல் அலையில் சிக்கித் தவித்த கல்லூரி மாணவா்கள் இருவரை நீச்சல் வீரா்கள் செவ்வாய்க்கிழமை மீட்டு காப்பாற்றினா். தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் சிஞ்சகம்பட்டியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் ஹ... மேலும் பார்க்க

புதுவைக்கு ரூ.200 கோடி மத்திய அரசு சிறப்பு நிதி: பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்

புதுவை அரசு கோராமலேயே மத்திய அரசு ரூ.200 கோடி சிறப்பு நிதியை வழங்கியுள்ளதாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா். மேலும் வரும் ஆகஸ்ட் மாதம் பிரதமா் நரேந்திர மோடி புதுச்சேரி வரவுள்ளதாகவும் அவா் தெரிவித்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 13 பேரிடம் பண மோசடி

புதுச்சேரியில் இணையவழியில் 13 பேரிடம் மா்ம நபா்கள் ரூ.3.40 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி இலாசுப்பேட்டையைச் சோ்ந்தவா் ராமேசுவரம் சென்று தங்குவதற்கு இணையத்தி... மேலும் பார்க்க