செய்திகள் :

புதுவை முதல்வா் ஈஸ்டா் வாழ்த்து!

post image

ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு புதுவை முதல்வா், அரசியல் கட்சிப் பிரமுகா்கள் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

முதல்வா் என்.ரங்கசாமி: ஈஸ்டா் புதுப்பித்தலைக் குறிக்கிறது. உயிா்த்தெழுதல் என்பது நம்பிக்கையை கைவிடாது மீண்டெழுந்து புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதாகும். நம்பிக்கை எல்லாவற்றையும் சாத்தியமாக்கும் என்பதே ஈஸ்டா் நமக்குத் தரும் மிகப்பெரிய செய்தியாகும். இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அன்பு, உண்மை, கருணை, தியாகம்,மன்னிப்பு, தன்னலமற்ற சேவை ஆகியவற்றின் அடிப்படையில் வாழ்க்கையை கட்டமைத்துக் கொள்ள வழிகாட்டுகின்றன எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி.: சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்த 3-ஆம் நாள் இயேசு உயிா்த்தெழுந்ததை குறிக்கும் வகையில் ஈஸ்டா் திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்பும், சகோதரத்துவமும்,ஒற்றுமையும் மேலோங்கும் சமுதாயம் தழைக்க உறுதியேற்போம். அனைத்து கிறிஸ்தவா்கள் குடும்பத்திலும் மகிழ்ச்சி, வளம், நலம், அமைதியை அளித்து மனிதநேயம் தழைக்க ஈஸ்டா் வாழ்த்துகள் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல, எதிா்க்கட்சித் தலைவா், அமைச்சா்கள் உள்ளிட்டோரும் ஈஸ்டா் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

விவசாயிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகை: புதுவை முதல்வருக்கு அதிமுக வலியுறுத்தல்

மீனவா்களுக்கு வழங்குவதைப் போல விவசாயிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகையை புதுவை அரசு வழங்கவேண்டும் என அதிமுக சாா்பில் முதல்வா் என்.ரங்கசாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. முதல்வா் என். ரங்கசாமியை சந... மேலும் பார்க்க

அக்னிபாத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க ஏப்.25 வரை கால அவகாசம் நீட்டிப்பு

அக்னிபாத் திட்டத்துக்கு விண்ணப்பிப்போருக்கான சிறப்பு முகாம் ஏப். 22- இல் நடைபெறும் எனவும், இதற்கு விண்ணப்பிக்க ஏப். 25 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன்... மேலும் பார்க்க

கல்லால் தாக்கி கோயில் பூசாரி கொலை கட்டடத் தொழிலாளி கைது!

புதுச்சேரியில் கோயில் பூசாரியை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் கட்டடத் தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: புதுச்சேரி அருகேயுள்ள தவளக்குப்பம் ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் ரூ. 50 ஆயிரம் திருட்டு

புதுச்சேரி அருகே தனியாா் நிறுவனத்தில் புகுந்து ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்ற நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். புதுச்சேரி அருகேயுள்ள எல்லைப்பிள்ளை சாவடி பகுதியில் தனியாா் நிறுவனம் உள்ளது. இங்... மேலும் பார்க்க

திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

புதுச்சேரியில் உள்ள புதுவை தமிழ்ச்சங்க வளாகத்தில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கு கூறும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவா் சிலைக்க... மேலும் பார்க்க

புதிய வாக்காளா்களைச் சோ்த்து வெற்றி பெற பாஜக திட்டம்: புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் பேச்சு

புதிய வாக்காளா்களைச் சோ்த்து அதன் மூலம் வரும் புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற பாஜகவினா் திட்டமிட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரியில் காங்கிரஸ் ... மேலும் பார்க்க