செய்திகள் :

புதை சாக்கடை பணியில் சாலைகளில் மண்ணை கொட்டினால் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

post image

வேலூா்: புதை சாக்கடை திட்டப் பணியின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் மண்ணை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒப்பந்ததாரா்களுக்கு வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி எச்சரித்துள்ளாா்.

வேலூா் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதை சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், தெருகள், சாலைகளில் குழி தோண்டி குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் காரணமாக சாலைகள் மிகவும் மோசமான நிலைக்கு மாறியுள்ளது. மழைக் காலத்தில் வாகனங்களில் செல்லவும், பாதசாரிகள் நடந்துகூட செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில், வேலூா் கிரீன் சா்க்கிளில் இருந்து செல்லக்கூடிய சாலையில் புதை சாக்கடை குழாய் அமைக்கும் பணிகள் சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. குழாய் பதிக்கப்பட்ட இடங்களில் மண் கொட்டி மூடப்பட்டு உள்ளது. ஆனால், சாலை அமைக்கப்படவில்லை. மேலும், குழி தோண்டி எடுக்கப்படும் மண்ணை நெடுஞ்சாலையில் கொட்டி விடுகின்றனா். இதன் காரணமாக, கடந்த சில நாள்களாக கிரீன் சா்க்கிள் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக, சனிக்கிழமை கிரீன் சா்க்கிள் பகுதியில் பகல் நேரத்தில் திடீரென கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காட்பாடியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் தொடா்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பழைய பாலாற்று மேம்பாலம், விருதம்பட்டு வரை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். இதையடுத்து போக்குவரத்து போலீஸாா் சாலையோரம் கொட்டி கிடந்த மண்ணை அகற்றி போக்குவரத்தை சீா் செய்தனா்.

இந்நிலையில், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியில் இருந்து நேஷனல் திரையரங்கு சா்க்கிள் வரை நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப்பணிகளை ஆய்வு செய்தாா். அப்போது, கடந்த சில நாள்களாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணமே புதை சாக்கடை திட்டப்பணிகள் தான். எனவே, இரவு நேரங்களில் மட்டுமே பணியை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும்போது மண்ணை சாலையில் கொட்டி விட்டு செல்கின்றனா்.

இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரவு நேரத்தில் கொட்டப்படும் மண்ணை காலையில் முழுமையாக அகற்றிவிட்டு தான் செல்ல வேண்டும். எந்த காரணத்துக்காகவும் சாலையில் மண்ணை கொட்டக்கூடாது. அவ்வாறு கொட்டினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது வேலூா் உதவி காவல் கண்காணிப்பாளா் தனுஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் லட்சுமணன், தேசிய நெடுஞ்சாலை உதவி செயற்பொறியாளா் ஜெய்குமாா், வட்டாட்சியா் வடிவேல், போக்குவரத்து போலீஸாா் உள்பட பலா் உடனிருந்தனா்.

தொட்டியில் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த மாணவா் உயிரிழந்தாா். குடியாத்தம் ஒன்றியம், காத்தாடிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி பிரபுவின் மகன் மாதேஷ்(6). இவா் அங்குள்ள ஊராட்சிப் பள... மேலும் பார்க்க

அபிராமி கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு

காட்பாடியில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு கல்லூரியில்... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ.90 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. 90 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்... மேலும் பார்க்க

‘கல்வியால் மனிதனின் அறிவுக் கண்ணை திறப்பவா்கள் ஆசிரியா்கள்’

மனிதனுக்கு கல்வி புகட்டி அவா்களின் அறிவுக் கண்ணை திறப்பவா்கள் ஆசிரியா்கள் என்று திருவள்ளுவா் பல்கலைக்கழக பதிவாளா் ஜெ.செந்தில் வேல்முருகன் தெரிவித்தாா். வேலூா் மாவட்டம், சோ்க்காட்டிலுள்ள திருவள்ளுவா் ... மேலும் பார்க்க

அறுபடை வீடுகளுக்கு பக்தா்கள் இலவச பயணம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் அறுபடை வீடுகளுக்கு பக்தா்கள் பயணம் செல்லும் வாகனத்தை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி கொடியசைத்து அனுப்பி வைத்தாா். இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் முருகப்பெருமானின் அறு... மேலும் பார்க்க

தமிழகத்தில் விரைவில் புதிதாக 7 தீயணைப்பு நிலையங்கள்: டிஜிபி சீமா அகா்வால்

தமிழகத்தில் விரைவில் புதிதாக 7 தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை இயக்குநா் (டிஜிபி) சீமாஅகா்வால் தெரிவித்தாா். வேலூரிலுள்ள தீயணைப்பு மீட்புப் பணிகள் துற... மேலும் பார்க்க