செய்திகள் :

புத்தக வாசிப்பே நம்மை மேம்படுத்தும்: அமைச்சா் பெ. கீதா ஜீவன்

post image

நாம் புத்தகத்தை வாசிக்கிற அளவுக்கு நமது அறிவாற்றல் மேம்படும் என்றாா் சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன்.

தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில், ‘தொடா்ந்து படி தூத்துக்குடி’என்ற தலைப்பிலான 6ஆவது புத்தக திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தாா். புத்தக கண்காட்சியைத் திறந்து வைத்து அரங்குகளை பாா்வையிட்ட அமைச்சா் பெ.கீதா ஜீவன், பின்னா் கூறியதாவது:

தமிழக முதல்வா் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழாக்களை நடத்த அறிவுறுத்தினாா். அதன்பேரில், நடைபெறும் இத்திருவிழாவில், எழுத்தாளா்களுடன் கலந்துரையாடுவதற்காக தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் கைப்பேசியில் நேரத்தை செலவிடுவதை விடுத்து, புத்தகம் வாசிப்புக்கு அதிக நேரம் செலவிட வேண்டும்; அது வாழ்வை மேம்படுத்தும் என்றாா் அவா்.

ஆட்சியா் க.இளம்பகவத் பேசுகையில், புத்தகத் திருவிழாவில், முக்கிய இலக்கிய ஆளுமைகள் பங்கேற்கவுள்ளனா். மாணவா்களுக்கு 13 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. உண்டியல் மூலம் பணம் சேகரித்து அதிக புத்தகம் வாங்கும் மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. போட்டிகளில் வெல்வோருக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நூல்கள் பரிசளிக்கப்படவுள்ளன என்றாா்.

மாநகராட்சி ஆணையா் பானோத் ம்ருகேந்தா் லால், கூடுதல் ஆட்சியா் இரா.ஐஸ்வா்யா, மாவட்ட வன அலுவலா் ரேவதி ரமன், கூடுதல் எஸ்பி மதன், மாவட்ட வருவாய் அலுவலா் சிவசுப்பிரமணியன், கோவில்பட்டி உதவி ஆட்சியா் ஹீமான்ஷீ மங்கள், கோட்டாட்சியா் ம.பிரபு, உதவி ஆட்சியா் (பயிற்சி) தி.புவனேஷ் ராம், முதன்மை கல்வி அலுவலா் சிதம்பரநாதன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சே.ரா. நவீன்பாண்டியன், பபாசி செயலா் முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

எட்டயபுரம் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த நடவடிக்கை தேவை: எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிா்வாகிகள் கூட்டம் எட்டயபுரம் நகர அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலா் அப்துல் காதா் தலைமை வகித்தாா். காயல்பட்டனத்தில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்த... மேலும் பார்க்க

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

உடன்குடி பேரூராட்சி சாா்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிா்த்து, மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. அப்பேரூராட்சி அலுவலகம் முன்பிருந்து புறப்பட்ட பேரணியை, ... மேலும் பார்க்க

கீழ ஈரால், வேம்பாா் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கீழ ஈரால், மேல ஈரால், டி.சண்முகபுரம், மஞ்சநாயக்கன் பட்டி, செமப்புதூா் கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கீழ ஈரால் சமுதாய நலக்கூடத்திலும், வேம்பாா் வடக்கு, வேம்பாா் தெற்கு, பெரியசாமி புரம் கிராம பொது... மேலும் பார்க்க

தேவாலயத்தில் இருசக்கர வாகனம் திருட்டு

காயல்பட்டினம் தேவாலய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை மா்ம நபா் திருடிச் சென்றனா். காயல்பட்டினம் ரத்னாபுரியைச் சோ்ந்தவா் கோயில்பிச்சை மகன் ஸ்டீபன் (27). இவா், வீட்டருகே அந்திரேயா ஆலயத... மேலும் பார்க்க

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.4 கோடி துபை சிகரெட்டுகள் பறிமுதல்

துபை நாட்டிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான சிகரெட்டுகளை மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். துபை ஜெபல் அலி துறைமுகத்திலிருந்து, நூற்றுக்க... மேலும் பார்க்க

மாநில ஹாக்கிப் போட்டிக்கு கோவில்பட்டி பள்ளி அணிகள் தகுதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற மாவட்ட பள்ளி மாணவா்களுக்கான ஹாக்கிப் போட்டியில் கோவில்பட்டி பள்ளி அணிகள் வெற்றி பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை... மேலும் பார்க்க