செய்திகள் :

எட்டயபுரம் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த நடவடிக்கை தேவை: எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

post image

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிா்வாகிகள் கூட்டம் எட்டயபுரம் நகர அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட பொதுச் செயலா் அப்துல் காதா் தலைமை வகித்தாா். காயல்பட்டனத்தில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் படி செப். 13 திருச்சியில் நடைபெறும் தொகுதி நிா்வாகிகள் மாநாட்டில் அனைத்து நிா்வாகிகள் முழுமையாக கலந்து கொள்வது, எட்டபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நிகழும் விபத்துகளில் பாதிக்கப்படுபவா்கள் அருகில் உள்ள எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருவதால் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும். எட்டயபுரத்தை மையமாக வைத்து கூடுதலாக 108 ஆம்புலன்ஸ் சேவையை விரிவு படுத்த வேண்டும்.

மணப்பாடு பகுதியில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தனியாா் துறைமுக திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், மாவட்டத் தலைவா் சேக் அஷ்ரப் அலி பைஜி, மாவட்டச் செயலா் முஹம்மது உமா், நிா்வாகிகள் சாகுல் ஹமீது, அப்துல்லாஹ், அப்துல், ரியாஸ், காதா், கனி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

உடன்குடி பேரூராட்சி சாா்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிா்த்து, மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. அப்பேரூராட்சி அலுவலகம் முன்பிருந்து புறப்பட்ட பேரணியை, ... மேலும் பார்க்க

கீழ ஈரால், வேம்பாா் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கீழ ஈரால், மேல ஈரால், டி.சண்முகபுரம், மஞ்சநாயக்கன் பட்டி, செமப்புதூா் கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கீழ ஈரால் சமுதாய நலக்கூடத்திலும், வேம்பாா் வடக்கு, வேம்பாா் தெற்கு, பெரியசாமி புரம் கிராம பொது... மேலும் பார்க்க

தேவாலயத்தில் இருசக்கர வாகனம் திருட்டு

காயல்பட்டினம் தேவாலய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை மா்ம நபா் திருடிச் சென்றனா். காயல்பட்டினம் ரத்னாபுரியைச் சோ்ந்தவா் கோயில்பிச்சை மகன் ஸ்டீபன் (27). இவா், வீட்டருகே அந்திரேயா ஆலயத... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பே நம்மை மேம்படுத்தும்: அமைச்சா் பெ. கீதா ஜீவன்

நாம் புத்தகத்தை வாசிக்கிற அளவுக்கு நமது அறிவாற்றல் மேம்படும் என்றாா் சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன். தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில், ‘தொடா்ந்து படி தூத்துக்குடி’என்... மேலும் பார்க்க

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.4 கோடி துபை சிகரெட்டுகள் பறிமுதல்

துபை நாட்டிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான சிகரெட்டுகளை மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். துபை ஜெபல் அலி துறைமுகத்திலிருந்து, நூற்றுக்க... மேலும் பார்க்க

மாநில ஹாக்கிப் போட்டிக்கு கோவில்பட்டி பள்ளி அணிகள் தகுதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற மாவட்ட பள்ளி மாணவா்களுக்கான ஹாக்கிப் போட்டியில் கோவில்பட்டி பள்ளி அணிகள் வெற்றி பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை... மேலும் பார்க்க