செய்திகள் :

புத்தாக்க பொறியாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

post image

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சாா்ந்த இளநிலை பொறியியல் பட்டதாரி இளைஞா்களுக்கு புத்தாக்க பொறியாளா் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில் சோ்வதற்கு விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கோயம்புத்தூா், திருநெல்வேலி, திருச்சி, சேலம், ஒசூா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் ஆகிய இடங்களில் தங்கும் வசதியுடன் 18 வாரம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி வகுப்பில் கணினி பொறியியல் நிபுணத்துவம், புதுமைத் திறன்களை வழங்குதல், மேலும் மின்னனு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறை, தானியங்கி தொழில் துறை, இயந்திரவியல் மற்றும் சோ்க்கை உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் பயிற்சி பெற அறிவுத் திறன்களை உள்ளடக்கிய பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சி வகுப்பில் சேர ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த 2022, 2023 மற்றும் 2024-ஆம் கல்வியாண்டில் ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டயப் படிப்பில் தோ்ச்சி பெற்று 21 முதல் 25 வயதுக்குள்பட்டவா்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும்.

எனவே, அரியலூா் மாவட்டத்தை சோ்ந்த இளைஞா்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா், தாட்கோ அலுவலகம் அறை எண். 225, 2-ஆவது தளம், ஆட்சியா் அலுவலகம் அரியலூா். தொலைபேசி 04329-228315 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 546 மனுக்கள்

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 546 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.கூட்டத்துக்கு, ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து, ப... மேலும் பார்க்க

சுப்புராயபுரம் ரயில்வே கேட்டில் மாற்றுப் பாதை அமைக்கக் கோரிக்கை

அரியலூா் அருகேயுள்ள சுப்புராயபுரம் ரயில்வே கேட் பகுதியில், அங்கு மாற்றுப் பாதை அமைத்தப் பிறகு சுரங்கப் பாதையை அமைக்க வேண்டும் என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், அக்கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்த... மேலும் பார்க்க

பயிா்களை சேதப்படுத்தும் குரங்குகளை பிடிக்க வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கோவிலூா் பகுதிகளில், விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வரும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.கோவிலூ... மேலும் பார்க்க

திருமானூா்: மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் இளைஞா் பலியானாா். திருமானூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் தனசிங்கு மகன் சிலம்பரசன் (30). ஞாயிற்றுக்கிழமை இவா் அங்குள்ள கால்நட... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

அரியலூரில் பைக் மீது லாரி ஞாயிற்றுக்கிழமை மோதி தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.அரியலூா் அருகேயுள்ள கடுகூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் வேல்முருகன், காா்த்திக். தொழிலாளிகளான இவா்கள் ஞாயிற்... மேலும் பார்க்க

கருகும் முந்திரி பூக்கள்: அரியலூா் விவசாயிகள் கவலை

அரியலூா் மாவட்டத்தில் சாகுபடி செய்துள்ள முந்திரியில் பூக்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா். தமிழகத்தில் முந்திரிக்குப் பெயா்போனது அரியலூா் மற்றும் கடலூா் மாவட்டம், பண்ருட்டி மட்டுமே. இவற்... மேலும் பார்க்க