செய்திகள் :

``புரிய வேண்டியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' - முடிந்த 10 நாள் கெடு; செங்கோட்டையன் பேட்டி

post image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும்.

அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்" என்று (செப்.5) கறாராகப் பேசியிருந்தார்.

சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் 'அதிமுகவில் ஒன்றிணைய வேண்டும்' என்ற கருத்தைத்தான் பெயர் குறிப்பிடாமல் அவர் வலியுறுத்தி இருந்தார்.

எடப்பாடி, செங்கோட்டையன்
எடப்பாடி, செங்கோட்டையன்

செங்கோட்டையன் இந்தக் கருத்தை முன்வைத்ததைத் தொடர்ந்து அதிமுகவில் அவர் வகித்து வந்த அத்தனை பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர், அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

அவர் மட்டுமல்லாமல் அவரின் ஆதரவாளர்களின் பொறுப்புகளையும் எடப்பாடி பழனிசாமி பறித்திருந்தார்.

அவர் விதித்த 10 நாள் கெடு இன்றுடன் (செப் .15) முடிவடைந்த நிலையில் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

"நூறாண்டு காலம் ஆட்சி கட்டிலிலே அமர வேண்டும் என்ற புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி அம்மாவின் கனவு நிறைவேற வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் அன்றைக்கு நான் மனம் திறந்து பேசினேன்.

இந்தக் கருத்திற்கு புரட்சித் தலைவி அம்மாவினுடைய விசுவாசிகளிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது."

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

என்னுடைய நோக்கம் இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்பதுதான். புரட்சித் தலைவி அம்மாவினுடைய ஆட்சி மலர வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இந்தக் கருத்துக்களை 5 ஆம் தேதி அன்று நான் பிரதிபலித்தேன்.

தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை மனதிலே கொண்டு புரிய வேண்டியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை நான் முன்வைக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

நம் இயக்கம் வலிமை பெற்று 2026 தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எல்லோரும் உறுதுணையாக இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்து விடைபெறுகிறேன்" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``விஜய்க்கு கூடும் கூட்டம், 25 ஆண்டுகால உழைப்பால் வந்தது; ஆனால்'' - பிரேமலதா விஜயகாந்த் சொல்வதென்ன?

திருச்சி மணப்பாறை சாலையில் முள்ளிப்பாடி என்ற இடத்தில் 73 அடி உயரக் கொடிக்கம்பத்தில் தே.மு.தி.க. கட்சிக் கொடி ஏற்றப்பட்டது. பிரேமலதா விஜயகாந்த் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து கல்வெட்டை திறந்து வைத்தார். ப... மேலும் பார்க்க

ஈரோடு: பெரியார் அண்ணா நினைவகத்தில் அண்ணா பயன்படுத்திய பொருட்கள்! - புகைப்படத் தொகுப்பு

ஈரோட்டில் பெரியார் அண்ணா நினைவகம்ஈரோட்டில் பெரியார் அண்ணா நினைவகம்ஈரோட்டில் பெரியார் அண்ணா நினைவகம்ஈரோட்டில் பெரியார் அண்ணா நினைவகம்ஈரோட்டில் பெரியார் அண்ணா நினைவகம்ஈரோட்டில் பெரியார் அண்ணா நினைவகம்ஈர... மேலும் பார்க்க

ADMK: ``அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும், இல்லையென்றால்!?'' - ஓபிஎஸ் எச்சரிக்கை

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல... மேலும் பார்க்க

`காயிதேமில்லத் சொன்ன பாடத்தை ஏற்று நடந்தால் பாஜக நேர்வழியில் நடந்திருக்கும்!' - கனிமொழி

நெல்லை மாவட்ட இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் எழுச்சி மாநாடு, மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடந்தது. இதில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “க... மேலும் பார்க்க

10 நாள் கெடு முடிந்தது, பலம் இழக்கிறாரா செங்கோட்டையன்! - அதிமுக-வில் என்ன நடக்கிறது?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நடைபெற்று வந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த பிப்ரவரி 9-ஆம் தே... மேலும் பார்க்க